Lord Siva

Lord Siva

Friday 24 October 2014

தாம்பத்ய உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்கவேண்டிய சில முக்கிய அம்சங்கள்


தாம்பத்ய உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்
தாம்பத்ய உறவில் ஆணும் பெண் ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவா க
விளக்கி இருக்கிறது.
குரல்நன்றாக இருப்பதற்குசில விதிமுறைக ள் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, ஜாதிக்காய், ஏலக்காய், திப்பிலி, வெட்டிவேர், பழைய பழச்செடியின் இலை இவற்றை நசுக்கி ஆணும், பெண்ணும் சாப்பிட்டுவந்தால், இனிமையான குரல் வளம் உண்டாகும். நல்லகுரல் வளம் இருந்தால், ஒருவரை ஒருவர், பேச்சி லேயே கவர்ந்திழுத்து அடிக்கடி கலவியில் ஈடு பட ஏதுவாகும் என்பது இதன் உள் நோக்க மாகும்.

உடல்வனப்பு என்பதும், ஒருவரை ஒருவர் கவர மிகமுக்கிய அம்சம். ஒரு பெண் எத்தனை தான், வயதில் சிறியவளாக இருந்தாலும், அவ ளது உடலில்வனப்பு, ஒரு மினுமி னுப்பு இல்லையென்றால், ஆணை கவர்ந்திழுப்பது கடினம். எனவே, ஆண், பெண் தங்கள் உடல் அழகைப்பேணிக்காக்கவேண்டியது அவசியம் என்கிறது காம சூத்திரம். அப்போது தான், இருவருக்குள்ளும் நல்ல சுமுகமான உறவு நிலைத்திருக்கும். இதற்கும் ஒரு உபாயம் சொல்லப்பட்டிரு க்கிறது. அது என்ன…?
எள், பழம், மஞ்சள், கோரக்கிழங்குஇவற்றை நன்றாக நசுக்கி நெய்யுடன் சேர்த்து ச்சாப்பிட்டு வர வேண்டும். இப்படித்தொடர்ந்து செய்து வந்தால், ஆண்., பெண்ணின் உடல் தங் கம்போல தளதளக்க ஆரம்பிக்குமாம். இன்னு ம் சில ஆண்களுக்கு ஆண்குறியில் விரைப்புத் தன்மை குறைவாக இருக்கும். இதனால் அவர் களது தாம்பத்ய வாழ்க்கையில் புயல்வீசி குடும்பமே ஆட்டம் கண்டுவிடும். அப்படிப்பட்ட ஆண்களின் குறையை நிவர்த்தி செய்யவும் ஒரு பக்குவம் சொல்ல ப்பட்டிருக்கிறது.
றாக அரைத்து ஆட்டுப்பால், தேன் இவற்றுடன் கலந்துதொடர்ந்து 7 நாட்களுக்குச்சாப்பிட்டு வர வேண்டும். அப்படிச்சாப்பிட்டு வந்தால், ஆண் குறியில் நல்ல விரைப்பு உண்டாகும். சுகமான தாம்பத்யம் அமையும். 

Wednesday 1 October 2014

மங்கையர் மார்பகம்


பெண்களுக்கான தீர்வுகள்
உயிர்வாழத்தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டி யலிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே.
ம் பற்றிய சில புரிதல்களோடு, சித்தர் பெரு மக்கள் அருளிய தீர்வொன்றி னையும் பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செயலுக்கானமனித உறுப்பான மார்பக 
பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றி ன் அளவு பரம்பரை உடல்வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரிய தாக தெரியும். கீழே உள்ள படம் மார்பகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.
ஒருவரின் மார்பக அளவு பெரிதாகவும், சிறியதாகவும் தெரிய அங்கே சேர்ந்திரு க்கும் கொழுப்புதான் காரணம் என்பதை மேலே உள்ள படத்தில் இருந்து எளிதில் புரிந்து கொள்ள முடியும். மருத்துவ மொ ழியில் சொல்வதானால் பாலை உற்பத் தி செய்துதரும் நொதியங்களையும், திசு க்களையும் உள்ளடக்கிய தசைக் கோளமே மார்பகம். தாய்மையின் அம்சமான இந்த உறுப்பினை மற்றெந்த உடல் உறுப்பு களைப் போலகருதிடாமல் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகு வது வாழ்விய ல் முரண்பாடுகளில் ஒன்று.
அரை நூற்றாண்டுகளுக்கு முன் னர் வரையிலும் கூட இறுக்க மான மார்க்கச்சை அணியும் பழ க்கம் தமிழரிடம் இல்லை. குளிர் பிரதேசத்தில் வாழ்ந்த வெள்ளையர்கள் குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டி உடலின்மீது பல அடுக்கு ஆடைகளைஅணிந்தனர். அவர்களின் ஆதிக்கத்தில் வந்த பின்னர் நாமும் நாகரீகம் என்ற பெயரில் இறுக்க மான உள்ளாடைகள், அதன் மேல் ரவிக்கைகள் என அணிய ஆரம்பித்தோம்.
இப்படி இறுக்கமான உள்ளாடைகளை பய ன்படுத்துவதினால் உண்டாகும் மேலதிக வியர்வை காரணமாக நோய்த்தொற்று, தோல் பாதிப்புகள், அழுக்கு சேர்தல், மார்ப கத்தில் இரத்த ஓட்டம் தடைபடுதல் போன் ற பாதிப்புகளை நமது பெண்கள் எதிர்கொ ள்ள ஆரம்பித்தனர். இது ஒருபுறம் என்றா ல், அழகியல் தேவை என்ற பெயரில் மார் பகங்களை பெரிதாக்குகிறேன், சிறியதாக்குகிறேன் என நவீன மருத்துவ செய்முறைகள், அறுவை சிகிச்சைகளுக்கு தங்களை உட்படுத்தி பாதிப்புக்கு ள்ளாவதும் தொடர்கிறது.
இயற்கையைமீறிய இம்மாதிரி செய ல்பாடுகளினால் பெண்கள்படும் வேத னைகள் சொல்லி மாளாது. இன்றைய நவ நாகரீகயுகத்தில் பெண்ணாக பிற ந்த ஒவ்வொருவருக்கும் மார்பக புற்று நோய் (Breast cancer)  தாக்கும் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள். இதன் தீவிர ம் இப்போதுதான் உணரப் பட்டு சீரான இடைவெளியில் ஒவ்வொரு பெண்ணு ம் மார்பக புற்றுநோய்க்கான பரிசோத னைகளை செய்து கொள்ள நவீன மருத் துவம் வலியுறுத்துகிறது.
மார்பக திசுக்களில் ஆபத்தான செல் கள் உண்டாவதைத்தான் மார்பக புற்று நோய் என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய் களுக்கு பாலைக் கொண்டு சேர்க் கும் நுண்ணறைகளின் உள் அடுக்கு களில் தோன்றும். இந்த மார்பக புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டு பிடிப்பது மிகவும் முக்கியமானது. இல்லையேல் உயிராபத்தை உண்டாக்கும்.

புற்று நோய் தொடர்பாகவும், அதற்கு சித்தர் பெருமக்கள் முன் வைத்திருக் கும் தீர்வுகள் பற்றியும் தனியொரு பதி வில் விரிவாய் பகிர்ந்து கொள்கிறே ன். இன்றைய பதிவில் தேரையர் பெண்களின் மார்பக வளர்ச்சிக்கென அருளிய வைத்திய முறை ஒன்றை மட்டும் பகிர்ந் து கொள்கிறேன்.
ஆம்!, பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கக்கூடிய ஒரு வைத்தி ய முறையினை தேரையர் அருளி யிருக்கிறார். கூறியிருக்கிறார்.
ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா!
தேரையர் வைத்திய சாரம் என் கிற நூலில்வரும் அப்பாடல் பின் வருமா று…
தப்பாது நிலக்கடம்பு ரசத்தை வாங்கி
தையலர்கள் கொங்கைமுலைத்தவிரப் பூசி
யப்பாது சார்பிழிந்து தோணியில் விட்டா ட்டி
யறிவாயிந் தப்படியே முறைநாள் மூன்று
வேப்பாது யிருதனமு யிருமல்
விரியுமடா தெள்ளுவனென் றரியா ளைக்கி
மப்பாது வணங்கி அடிவேர்தான் மூன்று
மாதித்த நாளிலெடுக் குளிச்சங் கட்டே
மார்பக வளர்ச்சி இல்லாத பெண்கள் நிலக் கடம்பு சாற்றை தங்கள்மார்பகங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பூசிவர மார்பகம் பூரண வளர்ச்சியடையும் என்கிறார்.
மேலும், ஒரு நிலக் கடம்புச் செடியை தேர்ந்தெடுத்து அதனை ஓர் ஞாயிற்றுக் கிழமையன்று வணங்கிக் கொள்ள வேண்டுமாம். அந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்றுஅந்த செடியின் வேரை எடுத்துக் கொண்டு வந்து தாயத்துக் குடு வையில் அடைத்து, அந்த தாயத் தைக் கட்டிக் கொள்வதாலும் வளர் ச்சி அடையாத பாகங்கள் வளர்ச்சி அடைந்து உடல் மிக அழகாக ஆகும் என்கிறார்.
இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கும் விவாத த்திற்கும் உட்பட்டது.

தாம்பத்தியம்ன்னா இதுதான்யா தாம்பத்தியம்!


செக்ஸ் உறவின் முக்கிய அம்சம் இது விடியவிடிய சொல்லிக் கொடுத் தாலும், கற்பவருக்கும் சலிக்காது, கற்றுக் கொடுப்பவருக்கும் அலுக் காது. காதலும், காமமும் இணை ந்து கைகலந்து, மெய்கலந்து களிப் போடு உயிர்கலந்து, உறவோடு சங்கமிக்கும் போது கிடைக்கும் இன்பம், புது வெள்ளத்தின் புதுப் பாய்ச்சலுக்கு இணையானது. ஒரு உறவின் போது யாரை எப்படி மகி ழ்விப்பது என்பதையும் கைவசம் தெரிந்து வைத்துக் கொண்டு கட்டில் மீது அமருவது நல்லது.
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா என்று கவிதை பாடுவ தோடு நின்று விடாமல், அவரது விழிகளில் படமெடுத்தாடும் விரகத் தையும், தாபத்தையும் கண்டுணர்ந்து, தெளிந்து, புரிந்து அதைத் தீர்க்கும் வித்தை ஆணுக்கு இருக்க வேண்டியது அவசியம். சரி ஒரு பெண்ணை எப்படி திருப்திப் படுத்துவது… பல ஆண்களையும் போட் டு உடைக் கும் கேள்வி இது.
என்னதான் செய்தாலும் என் மனைவியை திருப் திப்படுத்த முடியவில் லையே என்பது பல ஆண்களின் ரகசியப் புலம்பலாகவும் உள்ளது. ஆனால் இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை.. சற்றும் அலுத்துக் கொள்ளத் தேவையில்லை… நீங்கள் அணுக வேண்டிய முறையில் சின்னச்சின்ன மாற்றங்களைச் செய்தாலே போதும்.. உங்களவர் உங்களது வழிக்கு வந்து விடுவார்.
சரி பெண்களை எப்படி சந்தோஷப்படுத்துவது, திருப்திப்படுத்துவது என்பதற்கு சில டிப்ஸ்களைஇங்கு பார்ப்போம். ஆண்களைப் பொறுத் தவரை மின்னல் வேகத்தில் மூடுக்கு வந்து அதே வேகத்தி்ல் உணர்வுகளையும் கொட்டி விட்டுப்போய் விடுவார்கள். ஆனால் பெண்க ள் அப்படி இல்லை… பூ மாதிரி மென்மையாக ஆரம்பித்து புழுதியைக் கிளப்பும் புயலைப் போல வீறு கொண்டெழுந்து, சுழற்றியடிக்கும் சுனாமி போல மாறி பின்னர்தான் ஓய்வார்கள். இதை சந்திக்க, திறமையாக எதிர்கொள்ள ஆண்களுக்குத்தான் மிகவும் பொறுமை அவசியம்.
- உங்களது பெண் துணைக்கு சீக்கி ரம் மூடு வரவில்லையா.. உங்களு க்கு நல்ல மூடு இருக்கிறதா, கொ ஞ்சமும் யோசிக்காமல் ‘கீழே’ போய் விடுங்கள். உங்களது ‘வாய் ஜாலத்திற்கு’ நிச்சயம் அவர் வழி விடுவார், வாசலையும் திறந்து வைப்பார்!.
- முன் விளையாட்டுக்களுக்கு அதிக நேரம் கொடுங்கள். அவர் விளை யாடுவதை விட நீங்கள் நிறைய விளையாடுங்கள். கை, விரல், வாய்என எதையும் விடாதீர்கள். எல்லாவற்றையும் பயன்படுத்துங்கள். உங்களது கைகளில் அவரை ஒரு பூப்போல தூக்கி வைத்துக் கொண்டு சீராட்டி தாலாட்டி கவி பாடி உடலெங்கும் கிளர்ச்சி மழை யை பொத்துக் கொண்டு பெய்ய வையுங்கள். பிறகு பாருங்கள் வேடிக்கையை …!
யும், எதைத் தொட்டால் இடி இடிக்கும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு குறி பார்த்து அணுகுங்கள்.- தொட்டால் பூ கண்டிப்பாக மலரும்… உங்களது துணையின் உடலிலும் எங்கு தொட்டால் மின்னல் வெட்டும், எங்கு கை வைத்தால் மழை பெய் 
- உடலெங்கும் முத்த மழை பெய்யுங்கள். சின்னதாக கொஞ்சம், பெரிதாக நிறைய, ஆழமாக அலைஅலையென.. இப்படி முத்தத்திற்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாமல் கிடைக்கும் இடமெல்லாம் முத் தம் வையுங்கள். உதடுகளையும், அந்தரங்கப் பகுதிகளையும் உங்களது சூடான முத்தங்களால் கொந்தளிக்க வையுங்கள்.
- செக்ஸ் வைக்கும் நாளன்று நல்ல எனர்ஜியுடன் இரு க்குமாறு பார்த்துக் கொள்வ து அவசியம். அன்று காலை முதலே உங்களது துணை யிடம் டீஸ் செய்தபடியே பேச்சுக்களை வைத்துக் கொள்ளுங்கள். செக்ஸியாக , நகைச்சுவையாக, ஜாலியாக, கவிதைகள் சொல்லி அவரை அப்படியே ஜில்லென்று வைத்திருங்கள்.. அவரது உடலில் அப்படியே ஜிவுஜிவு ப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஏறி உடலெங்கும் உங்களது நினைவு தான் முழு வீச்சில் ஓடிக் கொண்டி ருக்க வேண்டும்.
- உறவின்போது படுக்கையில் உங் களது தேவைகளை அவர் பூர்த்தி செய்யும்போது அதே மாதிரி அவர து தேவைகளையும் நீங்களே அறிந்து அதைத் திருப்திகரமாக செய்து முடியுங்கள். பெண்கள் பெரும்பாலு ம் வாய் விட்டு சொல்ல மாட்டார்கள்… நாமாகப் போய்த்தான் நயமாக எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்ய வேண்டும். நீங்கள் ஆசை ஆசையாக செய்யும்போது நிச்சயம் அவரது மனசெல்லாம் துடி துடிக்கும், உடெலங்கும் படபடக்கும்.. உறவும் சிலுசிலுக்கும்.
- ஒரே மாதிரியான உறவில் தொடர்ந்து ஈடுபடாதீர்கள். இன்றுநின்றபடி, நாளை உட்கார்ந்தபடி, அடுத்து படுத்தபடி.. என்று ஒவ்வொரு முறையும் ஒரு தினுசாக, புது வெரைட்டியாக கலந்து கட்டி கலக்குங்கள்… அதுதான் பெண்களுக்கும் ரொம்பப் பிடிக்கும்.
- உங்களது துணையிடம் போவ தற்கு முன்பு, செக்ஸைத் தொட ங்குவதற்கு முன்பு அவருடன் நெருக்கமாக அமர்ந்தோ அல்லது மடியில் போட்டபடியோ, அல்லது படுத்தபடியோ நிறைய காத ல் மொழி பேசுங்கள் அவரை வர்ணியுங்கள்.. செல்லமே உன் உதடு கோவைப்பழம் போல இருக்கு.. உன் கிளி மூக்கு எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன் சங்குக்கழுத்துக்கு என்ன கிப்ட் தரலாம்… என்று காதல் மொழி பேசுங்கள்.
உங்களது காதல் மொழி, காமத் தூண்டல்கள், இன்பத்தை கொடுத் தும் லாவகம் என ஒவ்வொன்றும் சீராக அமையும்போது அவரது பொன் மேனி நிச்சயம் உருகும்.. உள்ளுக்குள் ஆசை பெருகும்.. ஏதேதோ உணர்வுகள் தோன்றி அவரு க்குள் உங்களை மூழ்கடித்து விடுவார். இப்படி நிறைய… செக்ஸ் உறவு என்பது ஏதோ ஆணும், பெண்ணும் சேர்ந்து படுக்கையில் கொஞ்ச நேர ம் அப்படி இப்படி செய்துவிட்டு பிறகு வேகம் வேகமாக உறுப்புகளை சேர்த்துக் கொண்டு எல்லாம் முடிந்த பின்னர் ஆளுக்கு ஒரு பக்கமாக திரும்பிப் படுத்து தூங்கிப் போவது அல்ல… இது இரு உயிரி ன் சங்கம்…
வெறும் உடல்கள் மட்டும் இணைவது இங்கு வேலைக்கு ஆகாது…உயிரோடு உயிராக இருவரும் கலக்க வேண்டும், உணர்வுகளின் ஒவ்வொரு அணுவிலும் உயிர் கலக்க வேண்டும்… எனக்குள் நீ வா, உனக் குள் நான் மூழ்குகிறேன்… காலம் வரை இருவரும் கலந்திருப்போம்… உயிரோடு, உடலோடு, உணர்வோடு ..!. இப்படித்தான் இருக்க வேண்டும் செக்ஸ்!… எனவே அந்த உணர்வோடு அடுத்த முறை சங்கமத்தை சந்தியுங்கள், சங்கடங்களை தவிருங்கள்.

சிக்கல்–65 ,சிக்கன்


சிக்கன் பிரியாணி, சிக்கன்-65, சிக்கன் குழம்பு என வாரா வாரம் சிக்கன் சுவைக்கும் குடும்பமா நீங்கள்?! உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சித் தகவல்கள்!
சமீபத்தில் ‘சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிராய்லர் கோழிகள் வளர்ப்பில் டெட்ராசைக்ளின், ஃப்ளோரோகைனோலோன், அமினோக்ளைக்கோசைட் உள்ளிட்ட அதிகப்படியான ஆன்டிபயாடிக் அந்தக் கோழிகளுக்குச் செலுத்தப்படுகிறது. இத்தகைய கோழிகளை உணவாக எடுத்துக்கொள்பவர்களுக்கும் அதிகப்படியான ஆன்டிபயாடிக் உடம்பில் தங்குகிறது. இது, பல்வேறு சிகிச்சைகளுக்காக நாம் எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாடிக் மருந்துகளை வேலை செய்யவிடாமல் தடுத்துவிடுகிறது’ எனும் அந்த அறிக்கை, ‘கோழிகளை சமைப்பதால் அதன் உடம்பில் உள்ள ஆன்டிபயாடிக் அழிந்துவிடாது’ என்றும் அதிர்ச்சி கிளப்புகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு பெயர் போன நாமக்கல்லில் பிராய்லர் கோழி வளர்க்கும் ஒருவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, தன் பெயர், அடையாளங்களைத் தவிர்த்துப் பேசியவர், ”நாங்க பெரிய கோழி கம்பெனிகளுக்காக ஒப்பந்த முறையில கோழிகளை வளர்த்து தர்றோம். அவங்க குஞ்சு கோழியோட, மக்காச்சோளம், சோயா, கருவாடு, உப்பு, கடலைப் புண்ணாக்குனு கோழிகளுக்கான தீவனங்களோட இன்னும் சில மருந்துகள் கலந்து உலர்தீவனமா மூட்டையில கொண்டுவந்து இறக்குவாங்க. அதைப் பிரிச்சு கோழிகளுக்குக் கொடுப்போம். 35 – 42 நாள்ல வளர்த்து உரியவங்ககிட்ட ஒப்படைச்சுடுவோம். 42 நாள் கோழி, தன்னோட வாழ்நாள்ல 3 கிலோ 600 கிராம் தீவனத்தை சாப்பிட்டிருக்கும். பிராய்லர் கோழியை கறிக்கோழினு சொல்வோம். இது கறிக்கு மட்டும்தான் உபயோகப்படும். முட்டைக்காக வளர்க்கப்படுற கோழியை லேயர்னு சொல்வோம்” என்றவர்,
”தடுப்பூசி, குடிநீர்ல கலக்குற மருந்து இதையெல்லாம் கம்பெனிக்காரங்களே தந்துடுவாங்க. இதுபோக கோழிகளுக்கு கண்ல டிராப்ஸ் ஊத்துவோம். கோழிகளுக்கு தண்ணீர் எல்லாம் சொட்டு நீர் முறையிலதான் கொடுப்போம். அந்த தண்ணியில சில மருந்துகளையும் கலப்போம். ஆனா, இதுக்கெல்லாம் பேர் எதுவும் தெரியாதுங்க” என்றார் வெள்ளந்தியாக!
பூப்பெய்தும் வயது… குறையும் ஆபத்து!
இப்படிப் பல ஊசிகளும், ஊட்ட மருந்துகளும் கொடுத்து வளர்க்கப்படும் இந்தக் கோழியைச் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பது பற்றி, திருமானூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் காசி.பிச்சையிடம் பேசினோம்.
”ஒவ்வொரு உயிரினத்துக்குமான வளர்ச்சியை, இயற்கை தானாக அதன் உடம்பில் நிர்ணயித்திருக்கும். அப்படியிருக்க, ஒன்றரை மாதத்திலேயே ஒரு கோழி செயற்கையாக வளர்க்கப்படுகிறது என்றால், அதை சந்தேகப்பட வேண்டாமா? அந்தக் கோழிகளுக்கு செலுத்தப்படும் ஊசிகள், மருந்துகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனாலும், க்ரோத் ஹார்மோன் எனப்படுகிற வளர்ச்சிக்கான மருந்துகளே இந்தக் கோழிகளுக்கு செலுத்தப்படுகின்றன என்பது உண்மை. குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியை இந்தக் கோழிகள் அடைய இதுவே காரணம். இத்தகைய கோழிகளில் சிக்கன்-65 எல்லாம் செய்து சாப்பிடுவது… நம் உடலுக்கு சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களையே கொண்டுவந்து சேர்க்கும்.
கிராமத்து நாட்டுக்கோழியை கவனித்தீர்களென்றால், அரை கிலோவில் இருந்து ஒரு கிலோ கணக்கில்தான் அதன் எடை இருக்கும். நம் வீட்டில், தெருவில் உள்ளதை உண்டு, ஓடியாடி, இயல்பாக வளரும் கோழி அது. அதனால் அதன் வளர்ச்சி ஆரோக்கியமாகவும் சீராகவும் இருக்கும் (இப்போது நாட்டுக்கோழியையும் கலப்பின மாற்றம் செய்து, பிராய்லர் போலவே வளர்ப்பவர்களும் பெருகியுள்ளனர் என்பது தனிக்கதை). அதேபோலதான் மனிதனின் வளர்ச்சியும் இயல்பானது, சீரானது. ஆனால், சமீப வருடங்களாக பெண் குழந்தைகள் பூப்பெய்தும் வயது 14-ல் இருந்து படிப்படியாகக் குறைந்து, இன்று 10, 9 என்று வந்து நிற்கிறது. மாதவிலக்குப் பிரச்னைகள், சீக்கிரமே ஏற்படும் மெனோபாஸ் நிலை என இவையெல்லாம் சங்கிலி விளைவுகளாகிவிடும்.
உயரம் ஊட்டத்தால் அல்ல!
ஆண் குழந்தைகளும் சட்டென ஏழடியில் வளர்ந்து நிற்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன என்று கொஞ்சம் நின்று யோசித்தால், இப்படி வளர்ச்சி ஊசிகள் ஏற்றப்படுகிற இறைச்சி, பால் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதால்தான் என்பது புரியும். ஆனால், நம் வீட்டுக் குழந்தைகளின் மிதமிஞ்சிய வளர்ச்சியை, உணவால் ஏற்பட்ட பிரச்னை என்று உணராமல், ஏதோ ஊட்டச்சத்தால் ஏற்பட்ட போஷாக்கு என்று நினைத்து சந்தோஷப்படுவது எவ்வளவு அறியாமை!” என்று சொல்லி பதறவைத்த டாக்டர், இந்த வகை உணவுகளால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை இன்னும் விரிவாகப் பேசினார்.
”வளர்ச்சி ஹார்மோன்கள் செலுத்தப்பட்ட உணவுகள் விஷயத்தில், அது பெண்களுக்கு ஏற்படுத்தும் பிரச்னைகள் பல. ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தபோது, ‘மாதவிலக்கில் பிரச்னை உள்ள பெண்கள் என்னிடம் தனியாக வந்து பேசுங்கள்’ என்று சொன்னேன். அத்தனை பெண்கள் என் அறைக்கு முன் வந்து நின்றதைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன்! இதற்கெல்லாம் காரணம், உணவுப் பழக்கம்தான். தவிர, அதிகப்படியான ஹார்மோன் ஊசிகள் ஏற்றப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால் தாய்மார்களின்  பால் சுரக்கும் தன்மை மாறிப்போகிறது. இதனால் பால் சுரப்பு நின்றுபோகும் தாய்மார்கள் தற்போது அதிகரித்திருக்கிறார்கள். இன்னொருபுறம், இந்த உணவு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், சீக்கிரமே பூப்படைதல், குறிப்பிட்ட வயதுக்கு முன்னரே மெனோபாஸ் வருவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன” என்று எச்சரித்தார் டாக்டர்.
சிக்கனை, கிச்சனிலிருந்து தள்ளுங்கள்!
அசைவப் பிரியர்கள் தங்கள் உணவு முறையில் செய்யவேண்டிய மாற்றங்களை அறிவுறுத்தினார், கோவையைச் சேர்ந்த ‘செக்ஸாலஜிஸ்ட்’ கோமதி சின்னசாமி. ”நாட்டுக்கோழி சாப்பிட கடினமாக, சமைக்க கொஞ்சம் நேரம் எடுக்கும். அதேசமயம், அதிக வலு தருவது நாட்டுக்கோழிதான். சென்னை போன்ற மாநகரங்களில் கிடைப்பது அரிதாக இருக்கிறது. கூடவே பிராய்லர் கோழியின் விலை குறைவு என்பதாலும், சாப்பிட மிருதுவாக இருப்பதுடன் சீக்கிரமே சமைக்க முடிகிறது என்பதாலும், பிராய்லர் கோழிகளைத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், பிராய்லர் கோழியில் உள்ள அதிகப்படியான கொழுப்பால், அதை சாப்பிடும் பலருக்கும் ஒபிசிட்டி ஏற்படுவது நிஜம். இன்றைய குழந்தைகள், அரை கிலோ சிக்கன்-65 உணவை தனியாளாகவே சாப்பிடுகிறார்கள். ஆனால், இந்தக் கொழுப்பைக் கரைப்பதற்குத் தேவையான உடல் இயக்கம் தராமல் டி.வி முன் உட்கார்ந்துகொள்கிறார்கள். பின் எப்படி அந்தக் கொழுப்பு கரையும்? இப்படி அதிகப்படியான கொழுப்பால்தான், பெண் குழந்தைகள் 10 வயதிலேயே பருவம் அடைகிறார்கள். இதுவே ஆண்களுக்கு, அவர்களின் ஆண் உறுப்பின் வளர்ச்சி தடைபடுகிறது. இந்தக் குழந்தைகள் வளரும்போது, இருபாலருக்கும் குழந்தையின்மை பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது” என்று அதிர்ச்சி கொடுத்தவர், சிக்கனை உடனே விடமுடியாது என்பவர்களுக்கான டிப்ஸ் (பார்க்க: பெட்டிச் செய்தி) கொடுத்ததோடு…
”மொத்தத்தில், சிக்கனை கொஞ்சம் தள்ளி வையுங்கள்… உங்கள் கிச்சனில் இருந்து!” என்று முத்தாய்ப்பாய் சொன்னார்.

சிக்கனை விடமுடியாது எனநினைப்பவர்களுக்கு…
 வாரம் ஒரு முறை அரை கிலோ சிக்கனை குழம்பாக வைத்து, ஆளுக்கு இரண்டு பீஸ் சாப்பிடலாம்.
 உங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏரி, குளம், வாய்க்கால், ஆறு முதலியவற்றிலிருந்து கிடைக்கும் மீன்களைச் சாப்பிடலாம்.
 வீட்டில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளைச் சாப்பிடலாம். இவை, கொழுப்பை குறைவாக சேமித்து வைக்கும்.
 வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டுக்கறியில் ஹார்மோன் அபாயம் இல்லை. எனவே, மாதம் ஒரு முறை சாப்பிடலாம்.
 கடல் மீன்களைப் பொறுத்தவரை, ஒரே வகை மீனாக அல்லாமல் பல வகை மீன்களாக சாப்பிடலாம். மீனில் கொழுப்பு மிகக்குறைவு.
பின்குறிப்பு: குளத்து மீன் என்று சொல்லப்படுகிற நெய் மீனை (பார்க்க வழுவழுவென்று இருக்கும்) உயிரோடு நம் கண் முன்பாகவே வெட்டித் தருவார்கள். இதை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம். இவை, கோழியின் கழிவுகளை சாப்பிட்டு வளரும், இந்த மீனைச் சாப்பிட்டால், சரும அலர்ஜிகள் வர வாய்ப்பிருக்கிறது.
ஆன்டிபயாடிக் ஆபத்து!
கோழிகளுக்கு அதிகப்படியாக செலுத்தப்படும் டெட்ராசைக்ளின், அமினோக்ளைக்கோசைட், ஃப்ளோரோகைனோலோன் போன்ற ஆன்டிபயாடிக் எல்லாம் கோழிகள் உடம்பில் ஏற்படும் கிருமிகளை அறவே அழித்துவிடுகின்றன. இத்தகைய மருந்துகளை உட்கொண்ட கோழிகளை சாப்பிட்டால், நம் உடம்பில் உள்ள செல்களை அழிப்பது, எதிர்பார்த்திராத சைட் எஃபெக்ட்ஸ் வர வைப்பது என நம் உடம்பின் இயல்பான மாற்றத்தை, வளர்ச்சியை அது சீர்குலைத்துவிடும்!

”அதிகப்படி ஏதுமில்லை!”
சிக்கன் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு பிராய்லர் கோழி வளர்ப்பாளர்களின் பதில்..?
இதைப் பற்றி பேசும் ‘வெங்கடேஸ்வரா ஹேச்சரீஸ்’ நிறுவனத்தின் தமிழக துணைப்பொதுமேலாளார் டாக்டர் செல்வகுமார், ”பொதுவா எல்லா கோழி பண்ணையிலயும் இந்த மாதிரி ஆன்டிபயாடிக் சேர்க்கப்படுறதில்லை. கோழிகளை வளர்க்க சொல்லி விவசாயிகளுக்கு குஞ்சுகளா கொடுத்திருவோம். அந்தந்த ஊர்ல உள்ள வெட்னரி டாக்டர் உதவியோட கோழிகளுக்கு ஊசி போடுவாங்க. கோழிகள் வளர்ந்ததும் அதை அப்படியே வித்துட முடியாது. நாலு அல்லது அஞ்சு நாள் கழிச்சுதான் விற்பனை செய்ய முடியும். இப்படி செய்யுறப்ப கோழிக்கு எதாவது பிரச்னை இருந்தாகூட தெரிஞ்சுடும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்ல பிராய்லர் கோழிகளுக்கு கொடுக்கப்படுற டிரக்ஸ் என்ன அளவுல எப்படி கொடுக்கணும்ங்கிற மாதிரியான சார்ட் இருக்கு. அதை அரசாங்கம் எப்பவும் கவனிச்சுட்டே இருக்கும். அங்க உபயோகிக்கிற மருந்துகள் அளவைத்தான் இங்கேயும் நாங்க உபயோகிக்கிறோம். இந்தியாவுக்குனு எந்தவித அளவீடும் கிடையாது. ஆனாலும் தேவையில்லாம ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்படுறது கிடையாது. இந்திய பிராய்லர் கோழிகளை ஜப்பான், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி பண்றோம். அதிகப்படியான ஆன்டிபயாடிக் கொடுக்கிறதா இருந்தா, அவங்கள்லாம் தங்கள் நாட்டுக்குள்ள எப்படி அனுமதிப்பாங்க?” என்று கேட்டார்.
நன்றி -அவள் விகடன்