Lord Siva

Lord Siva

Saturday 7 January 2012

மசாஜ்” செய்துகொள்வதால் . . . .

இயற்கை மருத்துவ முறையில் தற்போது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது “மசாஜ்!” பழ ங்காலத்தில் இருந்தே ‘மசாஜ்’க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரிஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ன ரே, “மசாஜ்”, நோய் தீர்க்கும் மருத்துவமாக பயன் படுத்தப் பட்டுள்ளது. “மசாஜ்” செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பய க்கிறது என்பதை விரிவாக காண்போம்.
தோல்:
“மசாஜ்” செய்வதால் தோலில் ஏற்படும் நன் மை கள் இணையற் றது. “மசாஜ்” செய்வதன் மூலம் தோலில் காணப் படும் துளைகள் விரிவ டைகிறது. இதனால் உட லில் காணப்படும் தீய கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும்.
தசைகள்:
“மசாஜ்” தசைகளில் காண ப்படும் இறுக்கத்தை குறை த்து, தசை வலியை நீக்கு கிறது. கடினமான வேலைக ளால் உடல் தசைகளில் லாக்டிக் ஆசிட் சேரும். “மசாஜ்” தசைகளில் சேரும் லாக்டிக் ஆசிட் களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற் சாகத்துடன் இருக்க உதவும்.
ரத்த ஓட்டம்:
“மசாஜ்” செய்யப் படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதி கரிக்கும். இதனால் அந்த உடல் உறுப் புகளுக்கு அதிக அளவில் ஊட்டச் சத்து கிடைப்பதுட ன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக் கும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும். “மசாஜ்” செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜ னை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன் படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
நரம்பு:
நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவா க மற்றும் மிதமாக செய் யப்படும் “மசாஜ்,” நரம் புகளில் காணப்படும் இறு க்கத்தை குறைப்ப துடன், அவற்றை மென்மையா க்கும். சுறுசுறுப்புடன் செய்யப்படும் “மசாஜ்” நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதி கரிக்கும்.
செரிமான மண்டலம்:
வயிற்றில் “மசாஜ்” செய்வதா ல் செரிமான மண்டலம் தூண்ட ப்படுவதுடன், வயிற் றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப் பதால், உடலின் எதிர்ப்பு சக் தியும் அதிகரிக்கும்.
சிறுநீர் மண்டலம்:
“மசாஜ்” செய்வது சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டு கிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகிறது.
இதயம்:
முறையாக செய்யப்படும், “மசாஜ்,” இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன் செயல்திறனை அதிகரிக்கி றது. பொதுவாக, “மசாஜ்” செய்வதற்கு உலர்ந்த கைக ளையே பயன்படுத்த வேண் டும்; ஆனால், உடல் அதிக வறட்சி தன் மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால், ஈரத்துணிகள் அல்லது மருந்து எண்ணெய் கள் போன்றவற்றை பயன் படுத்தலாம்.
மசாஜ் செய்வதற்கு நல்லெ ண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ் வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.
“மசாஜ்” செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:
* காய்ச்சலால் பாதிக்கப்பட்டி ருக்கும் காலங்களில் எவ்வித மசா ஜும் செய்யக்கூடாது.
* கர்ப்பிணி பெண்கள் வயிற்று ப் பகுதியில் மசாஜ் செய்வ தை தவிர்ப்பது நல்லது.
* வயிற்றுப்போக்கு வாயுப் பிர ச்சினை, அப்பென்டிசைட்டிஸ், சிறு குடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்சினை உடையவர்கள் வயிற்றில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* தோல் வியாதிகள் உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்த மற்றது.

No comments:

Post a Comment