Lord Siva

Lord Siva

Monday 23 January 2012

பெண்களின் ஆரோக்கியத்திற்கு குறிவைக்கும் அழகு சாதனங்களும் அழகு நிலையங்களும்

அழகு! இது பல விடயங்களில் வியாபித் திருந்தாலும் இன்றைய நாகரீகத்தில், இன்றைய யுகத்தில் மிக வேகமாக ஆக்கி ரமித்துக் கொண்டிருக்கும் அழகு சாதனப் பொருட்களை வியப்புடன் நோக்குமிட த்து அழகின் நூற்றாண்டோ என்று எண் ணும் அளவுக்கு பெண்களின் உருவ அமைப்பு மெருகேற்றப்பட்டு முலாம் பூச ப்படுகின்றது.அழகென்றால் பெண். பெண் என்றால் அழகு என்று எண்ணும் அளவு க்குத் தகவல் தொழில் நுட்பத்துடன் அழகுக் கலை போட்டி போட்டுக் கொண் டிருக்கிறது.
அழகின் பரிணாம வளர்ச்சி மிக வேகமாக முன்னேறிவரும் அதே நேரம், பெண்கள் தங்கள் அழகைக் காட்டித் தான் பிறருடைய கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றகாலம் கரைந் துவிட்டது. தங்கள் அறிவு, திறமை, ஆளுமை போன்றவற்றினால் இன்றைய சமுதாயத்தில் புகழையும் அங்கீகாரத்தையும் மிக எளிதில் பெற்று விடுகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண் மை.
என்றாலும் இன்றைய (மண முடித்த, மணம் முடிக்காத) பெண்கள் அழகான உடலமைப்பு வேண்டும். வசீகரிக்கும் முகம் வேண்டும். என்ற எண்ணத்துடன் பல உத்திகளை நாடுவதும் தரமற்ற அழகு நிலையங்களை நாடி ஓடுவதும் தர மற்ற அழகுப் பொருட்களுக்குப் பணத் தைத் திசை திருப்புவதும் சற்றுக் கவலை க்குரிய விடய மாகும்..
தகுதி, தரம் பாராமல் கவர்ச்சியான முக அமைப்புக்கும் உடலமைப்புக்கும் பணத் தையும் வீண்விரயமாக்கிப் பல பக்க விளைவுகளைக் காசு கொடுத்து வாங்கு கின்றனர். பெரும்பாலான இன்றைய பெண்கள் அழகு சாதனப் பொருட்களை நம்பி தனது வயதையும் வாழ்க்கையையும் அலுவல்களையும் அடகுவைப்பது தனது இயல் பின் மீதான நம்பிக்கையின்மையை வெளிக்காட்டுவதாகவே கருதலாம்
உளவியல் ரீதியாக நோக்கும் இடத்து தன்னம்பிக்கைக் குறைவின் வெளிப்பாடாகவும் தாழ்வு மனப்பான்மை அடித்தளமாகவும் அமை யும் அதேவேளை, ஆரோக்கியத்துக்கு மிக ஆபத் தாகவும் அமைந்துவிடுகிறது.
உண்மையிலேயே அழகுசாதனப் பொருட்கள் அழகைக் கூட்டுகின்றனவா என்பதனை ஆராய்ந் தால் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கின் றன. ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் பெரும்பாலான அழகு சாதனப் பொருட்கள் அழகையும் வனப்பையும் ஆரோக்கி யத்தையும் பாதிக்கின்றன.
அத்துடன் அழகு சாதனப் பொருட் களில் கலந்துள்ள வேதியல் பொரு ட்கள் பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. இந்த வேதியல் பொருட்கள் ஒவ்வாமை முதல் புற்று நோய் வரை யிலான பல் வேறு விதமான நோய்களைத் தோற்றுவிக்கின்றது. அதிகம் ஏன் பெண்மையைக் கூட வலுவிழக்கச் செய்கின்றன.
அழகு சாதனப் பெருட்களால் தலை வலி வாந்தி, ஏன் மன அழுத்தங் கள் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தாய்மை அடைந்த பெண்கள் அழகு சாதனப் பொருட்களைப் பாவிப்பது நல்லதல்ல என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் திட்டவட்ட முடிவு.
ஒரு தாயின் வயிற்றில் வள ரும் குழந்தைக்கு 812 வாரங் கள் வரை யிலான தாய்மை க்காலத்தில் இனப்பெருக்கம் ஏற்படுகின்றது. அப்போது சில ஹோமோன்கள் தாயின் உடலில் தூண்டப்பட்டு அந் தக் குழந்தையின் இனப் பெருக்க உறுப்புக்கான அடித் தளத்தை அமைக்கின்றது.
அந்தக் காலகட்டத்தில் அந்தக் கருவுற்ற தாய் பயன்படுத்தும் தர மற்ற அழகுசாதனப் பொருட்கள் குழந்தையின் வளர்ச்சி“குத் தேவையான ஹோமோன் தூண்டலை தடைசெய்து விடுகின்றது. இதனால் அந்தத் தாயின் வயிற்றில் உருவாகும் குழந்தையின் இனப்பெருக்க உறுப்பு பாதிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அந்தக் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போதே மலட்டுத்தன்மை அடையும் வாய்ப் புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.
இதற்கு ஒரே தீர்வு கர்ப்பிணிப் பெண்க ள் அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தாமல் இருப்பதுதான் நல்லது என்கிறார் ஆராய்ச்சியாளர்க ளில் ஒருவரான றிச்சர்ட் ஷார்ப். அழகு சாதனப் பொருட்கள் இந்தப் பாதிப்பை ஏற்படுத்த என்ன காரணம் என்று கூறுகையில், அவற் றில் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனக் கலவைகள் அதிகமாகச் சேர் க்கப்படுவதாகக் கூறுகிறார்.
இந்த இரசாயனம் ஒருவரு க்கு புற்று நோயை ஏற்படு த்தவல்லது என்று எச்சரிக் கிறார்.
நம்முடைய சருமத்தில் (தர மற்ற, மலிவான) அழகு சாத னப் பொருட்கள் பூசப்படுவதால்அது நம்மைப் பாதிக்காது என்றே பல ரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால, உண்மையில் அந்த அழகு சாதனப் பொருட்களில் உள்ள இராசாயனம் தோலில் ஊடுருவிச் சென்று பாதிப்பை உண்டாக்கிறது.
மலிவு விலையில் தரக்கட்டு பபாடற்ற எந்த அழகு சாத னப் பொரு ட்களும் மலிவா கக் கிடைகக்கிறது என்பதற் காக தரநிர்ணய நற் சான்றி தழ் இல்லாத அந்த அழகு சாதனப் பொருட்களை நாடு வதால் பாரிய பின் விளைவு களுக்கு முகம்கொடுக்க நேரி டும். நாம் மேலும் சில விட யங்களை இது தொடர்பில் ஆராயலாம்.
முகப்பொலிவையும் அழகினையும் ஏற்படுத்தும் வகையில் பயன் படுத்தப்படும் இராசாயனம் கலந்த கிரீம் வகைகளால் அளவு க்கு மீறி இளமையையும் அழகினையும் எதிர் பார்த்து முகச் சிதவையும் முது மைத் தன்மையையும் ஏற்படுவதை முன் கூட்டியே சிந்தி த்துச் செயற்பட வேண்டும்.
முக வசீகரத்தின் உதட்டு அழகுக் காகத் தொடர்ந்து உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்) போடும் பழக்கம் கொ ண்ட ஒரு பெண், தன்வாழ் நாளில் சுமார் நாலரைக் கிலோ எடை அளவு க்கு லிப்ஸ்டிக்கைத் தன்னை அறியாமலேயே உட்கொள்கிறாள் எனவும் இது மனச்சிதைவு, கருச்சிதைவு, சிறுநீரகக் கோளாறு, பெண்மைத்தன்மை இழப்பு உட்படப் பல்வேறு சிக்கல்“களை உருவாக்கக் கூடுமெனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பீட்டர் டிங்கில் தெரி விக்கிறார்.
மேலும், வாசனைத் திரவியங்களிலும் உடலில் தெளித்துக் கொள் ளும் பாடி ஸ்பிரேக்களிலும் ‘பாரபீன்ஸ்’ (parabens மற்றும் பாத்த லேட்ஸ் (phthalates) போன்ற அமிலங்கள் கலந்திருப்பதால் இவை காற்றில் கலந்து உடலுக்குள் புகு ந்து ஊறு விளைவிக்கக் கூடிய வை. மேலும் மார்பகப் புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்துகி றார்கள். கூந்தல் ஸ்பிரேயைப் பயன்படுத் துவதால் திசொரொஸின் என்ற நுரைஈரல் நோய் ஏற்படவும் வாய்ப்புண்டு.
மேலும் சில பொடுகு எதிர்ப்புச் ஷாம்பு மூலம் கிட்னி, ஈரல்,வயிறு மற்றும் இதர உறுப்புகளில் கோ ளாறு ஏற்படுவதாகவும் ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கின்றனர். வித விதமான நகப் பாலிஷ் (டியு??டெக்ஸ்) நகத்துக்கு அடியில் இரத்தக் கசிவை ஏற்படுத்துகின்றன வாம். மேலும் சில மஸ்கராவில் போதைப் பொருட்கள் கலக்கப்படுவ தால் கண் எரிச்சல், கண் சிகப்பா குதல் போன்றன ஏற்படு கின்றன.
இன்றைய இளம் பெண்களிடையே கூந்தலை நேராக்க வேண்டும் என்ற மோகம் மிகுந்து வருகின்றது. இந்த முறைக்காகப் பயன் படுத்தப்படும் பொருட்களில் ‘பார்மால்டி ஹைட்’ எனப்படும் இராசாயனம் அளவு க்கு அதிகமாகவே கலந்துள்ளது. இது புற்று நோயை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும் என உலக நல் வாழ்வு நிறு வனம் எச்சரித்துள்ளது.
அளவுக்கு மீறி அழகை நேசிக்கும்போது உடல் எடையும் கவனத் தில் கொள்ளப் படுகிறது. இதன் காரணமாக விளம்பர ங்கள் மிகைப் படுத்தும் “டயட்’ முறைக ளைப் பின்பற்றுகின்றனர். உதாரணமாக அமெரிக்கர்கள் ஆண்டுக்குச் சுமார் 35 மில்லியன் டாலர்களை இத்தகைய எடை குறைப்பு (ஸ்லிம்) பொருட்களுக்குச் செலவிடு கின்றனர் என்கிறது ஒரு புள்ளி விபரம். இத்தகைய மோகம் ஏற்படும்போது உயிரிழப்பும் ஏற்படுகின்றது. சமீபத்தில் மாஸ் கோவில் 35 வயதான பெண்ணொருவர் அள வுக்கு அதிகமாக உடலை இளைக்க வைக்கும் மருந்துகளை உட்கொண்டதால் மரண மடைந் துள்ளார். இதனை ஒரு உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
அழகின் மீது அதீத மோகம் ஏற்படும்போது, விளம்பரங்கள் மிகைப் படுத்தும் அழகுக்காக இறைவன் அன்பளித்துள்ள இயற்கை உடல மைப்பை, உருவ அமைப்பை செயற்கை முறைக்கு மாற்றும் போதே பல வித பாதிப்புகளும் ஆரோக்கியக் கேடுகளும்“ ஏற்படு கின்றன. இயற்கையை விட்டு விலகி செயற்கைப் பொருட்க ளின் அருகாமையை அதிகப்படுத் திக் கொள்ளும் ஒவ்வொரு செய லும் உடலின் இயல்புக்கு ஊறு விளைவிக்கக் கூடுமென்பதில் ஐயமி ல்லை.
“அழகு என்பது உருவம் சம்பந்தப்பட் டதல்ல. மனது சம்பந்தப் பட்டது’ என்பதே சிலரின் வாதம். இதுவே உண்மையான கூற்று. மனதின் அழகே முகத்தின் பொலி வு. பெண்கள் போலி உருமாற்றங் களை நம்பி நாடி ஓடாமல் தன்னில் இருக்கும் அழகையும் ஆளுமைத் திறமையையும் நாடவேண்டும்.
அழகு பெண்களின் கைகளில் அல்ல.. காசுகளில்தான் தங்கியுள் ளது என்ற நிலை மாறவேண்டும். பணத்தைக் குறிக் கோளாகக் கொண்டிராமல் மக்கள் நலனு க்காகவும் சேவை மனப்பான்மையு டனும் ஆத்மதிருப்தியுடனும் தரமான நற்சான்றி தழ்களுடன் எத்தனை அழகு நிலையங்கள் வலம் வருகின்றன. விளம்பரங்கள் மூலம் மக்களைக் கவர்ந்திழுக்கும் அழகு சாதனப் பொருட்கள் எத்தனை சதவீதமா னவை ஆரோக்கியமானதாக உண்மை அழகினைக் கொடுக்கக் கூடியதாக உள்ளது என்பது கேள்விக்குறி.
இரசாயனப் பொருட்களின் கலப் பற்ற இயற்கைப் பழம் மற்றும் மூலிகைகளைக் கொண்டு செய் யப்படும் பேஷியல், கிரீம் வகை கள் அழகுப் பொருட்கள் பரீட்சிக் கப்பட்ட தரநிர்ணய அங்கீகாரத் துடன் பாவிப்பதால் பாதிப்புகள் ஏற்படாதென்பது பொது வான கருத்து. இளமையும் அழகும் வேண்டும் என்பத ற்காக அதே இளமையில் முதுமையையும் காலப் போ க்கில் முக விகாரத் தன்மை யையும் வாங்கிக் கொள்ளும் இந்த நிலைமை இன்றைய நவீன யுகத்தில் மாற வேண் டும். மாறுமா?
சிதைந்த உருவத்தை சீர்படுத்தலாம். ஆனால், சீரான உருவமைப்பு சீர் கெடாமல் பாத்துக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.

No comments:

Post a Comment