Lord Siva

Lord Siva

Tuesday 17 January 2012

கர்ப்பிணித்தன்மை


Posted On Jan 17,2012,By Muthukumar


கர்ப்பிணித்தன்மை
கர்ப்ப நிலை
கர்ப்பகாலம் (Pregnancy)
கர்ப்பகாலம் ஒரு சாதாரண விடயமாகும்.இது ஒவ்வொரு பெண்ணுக்கும்,ஒவ்வொரு முறையும் வித்தியாசமான அனுபவம்.நீங்கள் எதிர்கொள்ள போவது என்ன என்பதை யாராலும் கூற முடியாது.உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து வைத்திருத்தல் நன்மை பயக்கும்.
முதல் மூன்று மாதங்கள்(1-12 வாரம்)
  • மாதவிடாய் நிறுத்தம்.
  • காலையில் வாந்தி ஏற்படுதல்.
  • மார்பகங்கள் பெருக்கும்;தொடும் போது வலியை தரும்.
  • முலைகாம்பை சூழ நிறமடைதல்.
  • முலைகாம்புகள் பெரிதாகி,நிறமடையும்.
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
  • களைப்பு.
  • மலச்சிக்கல்.
  • நெஞ்சு எரிவு.
  • உணவு மீது அதிக விருப்பம்.
இரண்டாவது மூன்று மாதங்கள்(13-28வாரம்)
  • உடல் நிறை அதிகரிப்பு.
  • குழந்தை உதைக்க ஆரம்பிக்கும்.
  • மார்பகங்கள் பெருக்கும்.
  • மலச்சிக்கல் மற்றும் மூலம்.
  • நெஞ்சு எரிவு.
  • கால்,கை,முகம் வீக்கம்.
  • தொப்புளுக்கும் பெண் உறுப்புக்கு இடையே அடர்ந்த கோடு.
  • பால் சுரத்தல்.
  • கால் வலி.
  • யோனி வெளியேற்றம்.
     
மூன்றாம் மூன்று மாதங்கள்(28-40 வாரம்)
  • அதிகளவான குழந்தை அசைவு.
  • தொப்புள் வெளியாகுதல்.
  • மூச்சு எடுக்க கக்ஷ்டமாயிருத்தல்.
  • பொய்யான பிரசவ வலி.
  • அடி வயிற்று வலி.(Braxton Hick)
  • தூக்கமின்மை.
  • கால் நாளங்கள் பெருத்தல்.
கர்ப்ப காலத்தில் பொதுவாக ஏற்படும் பிரச்சினைகள்.

மார்பக வலிக்கு என்ன செய்வது?
நன்கு தாங்கக் கூடிய மார்பு கச்சை பாவிக்கவும்.
காலையில் வாந்தி எடுக்க வேண்டும். இதை தவிர்ப்பது எப்படி?
  • படுக்கையிலிருந்து எழ முன்னர் 15 நிமிடம் இருக்கவும்.
  • குறைவளவு உணவுகள் அடிக்கடி உண்ண வேண்டும்.
  • சாப்பிட்ட பின் நீர் அருந்துங்கள்;சாப்பிடும் போது அல்ல.
  • காரசாரமான எண்ணை உணவு வகைகளை தவிக்க.
எனக்கு எப்போதும் களைப்பாக இருக்கிறது. இதை தவிர்ப்பது எப்படி?
  • சமநிலையான உணவுகளை உண்ணவும்.
  • தனியாக எல்லா வேலைகளையும் செய்ய வேண்டாம்.நண்பர்களின் உதவியை நாடுங்கள்.
  • உடற்பயிற்சி, தொடர்ச்சியாக எடுத்துக் கொள்க.
  • எல்லா வேலைகளையும் ஒரே அடியாக செய்யாமல்,இளைப்பு நேரங்கள் எடுக்கவும்.
மலச்சிக்கல் காணப்படுகின்றது. என்ன செய்யலாம்?
அதிகளவு நீர் குடியுங்கள்.
நார் பொருட்கள் அதிகம் கொண்ட உணவுபொருட்கள்(பழங்கள்,மரக்கறி,பச்சை இலைகள்)உட்கொள்ளவும்.
தொண்டையில் எரிவு ஏற்படுகின்றது.என்ன செய்யலாம்?
  • குறைவளவு உணவு, அடிக்கடி எடுக்கவும்.
  • காரசாரமான உணவுகளை தவிர்க்க.
  • உண்ணும் போது நீர் குடிக்காதீர்கள்.
  • உட்காரும் போதும், படுக்கும் போதும் தலையை உயர்த்தி வைத்து கொள்க.
  • சாப்பிட்ட உடன் படுப்பதை தவிக்க.
எனக்கு மூச்சு எடுக்க கக்ஷ்டமாயிருக்கின்றது. என்ன செய்யலாம்?
  • படுக்கும் போதும் தலையை உயர்த்தி வைத்து கொள்க.
  • வேலை நடுவில் சிறிய இடவேளை.
  • வேகமாக இடங்களுக்கு செல்வதையோ, சன நெருக்கடி உள்ள இடங்களுக்கு செல்வதையோ தவிர்த்து கொள்க.
     
அடிக்கடி சிறுநீர் கழிக்க தேவை. என்ன செய்யலாம்?
  • இது சாதாரணமான ஒரு நிலை ஆகும். குழந்தை வளர்ச்சியினால் ஏற்படும் அமுக்கத்தால் சிறுநீர்ப்பை குறைவான சிறுநீரையே சேமிக்கும்.
  • நீர் குடிப்பதை குறைக்க வேண்டாம்.
  • சிறுநீர் கழிக்கும் போது, எரிவு ஏற்படின் வைத்தியரை நாடவும்.
யோனியில் இருந்து வெளியேற்றம் ஏற்படுகின்றது.என்ன செய்யலாம்?
  • பருத்தியிலான உள்ளாடை அணியவும்.
  • மென்மையான சவர்க்காரம் பாவிக்கவும்.
  • சவர்க்காரம் நாளுக்கு இருமுறை பாவிக்கவும்.
  • யோனியை எதுவும் கொண்டு துடைக்காதீர்கள்.
  • யோனி பகுதியில் சவர்க்காரம்,பவுடர் பாவிக்காதீர்.
  • உள்ளாடைகளை வெயிலில் காய்ச்சவும்.
  • வெளியேற்றம் மணமுடையதாகவோ,நிறமாற்றத்துடனோ காணப்பட்டால் சுகாதார சேவை வழங்குபவரை நாடவும்.
     
கால் வீக்கத்திற்கு என்ன செய்யலாம்?
  • உட்காரும் போதும், படுக்கும் போதும் காலை உயர்த்தி வைக்கவும்.
  • உங்கள் இடப்பக்கத்தில் படுக்கவும்.
  • தொடர்ந்து உடற்பயிச்சி செய்யவும்.
  • அதிகம் உப்புத்தன்மையான உணவுகளை தவித்து கொள்ளவும்.
  • வீக்கம் அதிகரித்தால் சுகாதார சேவை வழங்குபவரை நாடவும்.
நீங்கள் கர்ப்பம் தரித்ததை அறிந்து கொள்வது எப்படி?
முதலாவதாக உங்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் (மற்றய அறிகுறிகள் பின் தொடரும்). மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டவுடன் குருதியில் hca பரிசோதிக்கப்பட்டு கண்டுபிடிக்கப்படலாம். மாதவிடாய் தவறவிடப்பட்டு இரண்டு கிழமைகளில் சிறுநீர் பரிசோதனைகள் மூலம், ஒலிமூல ஸ்கேன் மூலமும் கர்ப்பம் தரித்தது கண்டுபிடிக்கப்படலாம்.
கர்ப்பம் தரித்தவுடன் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
வேறு ஏதும் பிரச்சினைகள் இல்லை எனின், வைத்தியரை அவசரமாக நாட வேண்டிய தேவை இல்லை. பொது சுகாதார தாதியை சந்திக்க வேண்டும். அவர் கர்ப்ப காலத்துக்கான card ஒன்றை தருவார்; நீங்கள் அரச ஆஸ்பத்திரி ஒன்றில் பிரவச கிளினிக் ஒன்றில் பதிவு செய்ய வேண்டும்.
பிரசவம் ஏற்பட 2-3 மாதத்துக்கு முன் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டி ஏற்படலாம்.
கர்ப்பகாலத்தில் உங்கள் வாழ்க்கைமுறையை எவ்வாறு மாற்றிக்கொள்ள வேண்டும்?
  • மரக்கறி,பழங்கள்,முட்டை,மாமிசம் என்பன கலந்த சமநிலையான உணவு வேளை.
  • அதிகளவான நீர் மற்றும் குடிபானங்கள்(நீர் 10- குவளை).
  • முதல் மூன்று மாதங்களில் போலிக் அமிலம் மட்டும் எடுக்க வேண்டும்.
  • நான்காம் மாதம் முதல் இரும்பு,மற்றும் கல்சியம் போலிக் அமிலத்துடன் எடுக்கவும்.
  • பூச்சி மருந்து இரண்டாம் மூன்று மாதங்களில் கொடுக்கப்படும்.
  • உணவுகளுடன் பரிசோதனை செய்யாதீர்கள்.தெரிந்த உணவுகளை மட்டும் உட்கொள்ளவும்.பழக்கப்படாத உணவுகளை தவிக்கவும்.
  • உங்கள் உடல் பருமன் சீராக அதிகரித்து செல்வதை காணலாம்.ஒரு மாதத்திற்கு 2 Kg அளவில் அதிகரிக்கும். இது கிளினிக்கில் கண்கானிக்கப்படும்.
  • மெல்லிய ஆடைகள் அணியவும்
  • சன நெருக்கடியான இடங்களை தவிர்த்து கொள்ளவும்.
     
கர்ப்பகாலத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்ன?
  • சிறுநீர் பரிசோதனை.
  • குருதியில் ஈமோகுளோபின் அளவு.
  • விரதத்தில் குருதி குளுக்கோசு-இதில் அசாதாரன நிலை இருப்பின் PPBSஅல்லது OGTT.
  • இரத்த வகை.
  • VDRL-சிபிலிஸ் பார்ப்பதற்கு.
நிம்மதியாக மன உளைச்சலின்றி எவ்வாறு இருப்பது?
கர்ப்ப பெண்மணியுடன் தொடர்புள்ள வாழ்க்கை துணை,குடும்பம் மற்றும் அண்டை வீட்டார்,அப்பெண்மணியுடன் வாழ்க்கையை நிம்மதியாக நடத்தி செல்ல உதவ வேண்டும்.அன்றாட வீட்டு வேலைகளுக்கு அவளுக்கு உதவி செய்தல்,அவருடன் பேசுதல்,அவருடய பிரச்சினைகளை கேட்டு அவருக்கு உதவ வேண்டும்.
இது கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை குறைக்கும். மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வது, மென்மையான இசை கேட்பது என்பன உதவி செய்யும்.
சாதாரண தாம்பத்திய உறவை பேணலாமா?
கர்ப்பகாலத்தின் போது சில பெண்களுக்கு உடலுறவு தேவை அதிகரிக்கும். சிலருக்கு மாற்றம் இருக்காது. சிலருக்கு குறையும். கர்ப்பகாலம் முழுவதும் உடலுறவு கொள்ளாலாம். எனினும் வெவ்வேறு நிலைகளில் உடலுறவு கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்ளக்கூடிய நிலைகள்.
பக்கமாக : முன் -பின்
உங்கள் துணை உங்கள் பின் இருப்பர்.பின்புறமாக உங்களுக்குள் செல்வார்.
பக்கமாக : முன் –முன்
இது கர்ப்பகாலத்தின் முற்பகுதியில் செய்யலாம்,வயிறு வளர்ந்த பின் செய்ய முடியாது.இதன் நன்மைகள் உங்கள் துணையை நேருக்கு நேராக பார்க்கலாம்.
துணை மேலாக
கர்ப்பகாலம் முன்னேறும் போது இது ஒரு கக்ஷ்ரமான நிலையாகும்.ஒரு சிறிய மாற்றம் செய்யலாம்.உடல் நிறையை தனது கைகளில் தாங்கினால் உங்கள் வயிற்று பகுதியில் அமுக்கம் ஏற்படுவது குறைவாகும்.படுத்த நிலையில் அதிக நேரம் இருக்க கூடாது.
பின்னால் உட்செலுத்தல்
நீங்கள் கைகளாலும் முழங்கால்களாலும் இருக்கும் போது,உங்கள் துணை பின்னால் உட்செலுத்துவார். இது வயிறு வளர்ந்த பின் ஒரு சிறந்த நிலை ஆகும். இதன் போது வயிறு மீது அழுத்தம் கொடுப்பதும் குறைவாக இருக்கும்.
துணையின் மடி
இதன் போது உங்கள் துணையின் மாடியில் நீங்கள் உட்கார வேண்டும்.
பெண் மேலே
இதன் நன்மை,உங்கள் நிறையை உங்கள் முழங்கால்களால் தாங்கலாம்.இதன் போதும்,வயிறு மீது அழுத்தம் ஏற்பட்டது.
செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்?
நடப்பதே சிறந்த உடற்பயிற்சி ஆகும்.இது பிரசவத்துக்கு உதவும்.நீச்சலும் சிறந்த உடற்பயிற்சி.வெளிப்புற உடற்பயிற்சியை தவிக்கவும்.
கர்ப்பகாலத்தில் எவ்வாறான விடயங்களுக்கு சுகாதார உதவியை நாட வேண்டும்
  • அதிக குருதி வெளியேறல்.
  • திடீரென திரவம் வெளியேறல்.
  • குழந்தையின் அசைவு வெகுவாக குறைதல்.
  • கடுமையான தலைவலி.
  • அதிகப்படியான வாந்தி.
  • கடும் வயிற்று வலி.
  • உயர் காய்ச்சல்.
 கர்ப்பகாலத்தின் போது இரத்த குறைவு (குருதிச்சோகை)
கர்ப்பகாலத்தின் அதிகப்படியான இரும்புசத்து தேவை என்பதால்,குருதிச்சோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது.உங்களுக்கு மயக்கம்,பலவீனம்,மூச்சுவிட கக்ஷ்டம் ஏற்படுமெனின்,குருதிச்சோகையாக இருக்கலாம்.உங்கள் குடும்ப மருத்துவர் ஒரு சிறு குருதி பரிசோதனை மூலம் இதனை கண்டு பிடிப்பார்.
இரும்பு சத்து கூடிய உணவுகள்- இறைச்சி,மீன்,இலைகள்,மரக்கறிகள்,இரும்பு துணை மருத்துவங்களின் தேவை ஒரு வைத்தியரினால் நிர்ணயிக்கப்படும்.

கர்ப்பகாலத்தின் போது உயர் குருதி அமுக்கம்.

கை,கால்,முகம் போன்ற பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டால்,ஒரு வைத்தியரை நாடவும்.கடுமையான அமுக்கம் உயர்குருதி அமுக்கத்தின் ஒரு அறிகுறியாகும்.
கர்ப்பகாலத்தின் போது நீரிழிவு நோய்
உயர் குருதி குளுக்கோசு- கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறியாகும். இது பிரசவ கிளினிக்கில் கண்டுபிடிக்கப்படலாம். 26-28 கிழமைகளில் செய்யப்படும் ‘Glucose tolerance test’மூலம் இதை ஊர்ஜிதப்படுத்தலாம்.
கர்ப்பகாலத்தில் வேறு சில பக்கவிளைவுகள்
வீக்கமடையும் நாளங்களும் தோலில் ஏற்படும் மாற்றங்களும் கர்ப்பகாலத்தில் பொதுவானவை. இது உங்களுக்கோ, உங்கள் குழந்தைக்கோ கேடு விளைவிக்காது.
சிறுநீர் தொகுதி நோய்கள் பொதுவாக காணப்பட்டாலும் கர்ப்பகால அறிகுறிகளினால் கண்டு பிடிக்க முடியாமல் போகலாம்.
எனினும்,பெண்ணுக்கு பெண் இந்த அறிகுறிகள் வேறுபடும்; பிரசவத்துக்கு பிரசவமும் இவை வேறுபடும். உங்கள் உடம்பு கர்ப்பகாலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றி கொள்ளும். ஏதாவது பிரச்சினை இருப்பின் வைத்தியரை நாடவும்.
பிரசவத்திற்கு பின் ஏற்படக்கூடிய மாற்றங்கள்
Lochia- இது கர்ப்பப்பையில் இருந்து வெளியேறும் ஒரு திரவம் ஆகும். மாதவிடாயை ஒத்தது. எனினும் சற்று அடர்த்தியானது. இது ஆரம்பித்தில் சிவப்பாக இருந்து பின் மஞ்சள்-வெள்ளையாக மாறும். இது 2-3 கிழமைகள் வரை இருக்கும். 4 கிழமைகளுக்கு மேற்படின் வைத்தியரை நாடவும்.
இலிங்க உறுப்புகள்- உங்கள் யோனி துவாரம் பிரசவத்தின் போது இழுவைக்கு உட்படும். எனவே சில நாட்களுக்கு வலி காணப்படலாம். தையல்கள் இருப்பின் கக்ஷ்டமாயிருக்கலாம். சுடுநீரால் குளித்தல் சுகம் தரும்.
மார்பகங்கள்- பால் நிறைந்த மார்பகங்கள் சற்று கடினத்தை தரலாம். பாலூட்டல் ஆரம்பித்த பின் வலி குறையும். பாலூட்டல் பற்றி கற்றுக்கொள்ள தாதிமார் உதவி செய்வார்கள். ஏதாவது பிரச்சினை இருப்பின், பொது சுகாதார தாதியை நாடவும். பாலூட்டவில்லை எனின் வலுவான மார்பு கச்சை ஒன்றை பாவிக்கவும்.
சிறுநீர்பை/குடல்- பிரசவத்தின் போது சிறுநீர்ப்பை அழுத்தப்படும். எனவே, சிறுநீர் கழிப்பதில் கக்ஷ்டம் ஏற்படலாம். அதிகளவு நீர் ஆகாரங்கள் உட்கொள்ளவும். மலச்சிக்கல் பிரசவத்தை தொடர்ந்து – ஒரு வாரம் வரை காணப்படலாம். அதிகளாவு நீர், மரக்கறி வகைகள் உதவும்.

பிரசவத்தின் பின் வைத்தியரை நாடவேண்டியது எப்போது?
குழந்தையின் பிரச்சினைகள்
  • மூச்சுவிட கக்ஷ்டம்.
  • பால் குடித்தலின் பிரச்சினை.
  • காய்ச்சல்.
  • கடும்நிற சிறுநீர்.
  • தொப்புள் கொடி சிவப்பு நிறமாக இருத்தல்/ திரவம் வெளியேறுதல்.
  • 20 மணித்தியாலங்களுக்கு மேல் தூக்கம்.
  • சிறுநீர் குறைவாக கழித்தல்.
தாயின் பிரச்சினைகள்
  • மார்பகங்களில் வலி.
  • வயிற்று வலி.
  • சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.
  • கால்களில் வலி.
பிரசவத்தின் பின் சிறந்த குடும்ப கட்டுப்பாடு என்ன?
குடும்ப கட்டுப்பாடு வில்லை- பாலூட்டுவோர் எனின் பிரசவத்திற்கு 6 மாதத்தின் பின்.
பாலூட்டவில்லை எனின் – 6 கிழமைகளின் பின்.
ஊசி மூலம் குடும்ப கட்டுப்பாடு- பாலூட்டுவோர் எனின் பிரசவத்திற்கு 6 கிழமைகளுக்கு பின்.
பாலூட்டவில்லை எனின் – 6 ஒரு மாதத்தின் பின்.
பாலூட்டுவதன் நன்மைகள்
குழந்தைக்கு
  1. தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான கூறுகள் மூலம் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள், ஒவ்வாமை நோய்கள், வயிற்றோட்டம் போன்றன குறையும்.
  2. குழந்தையின் விருத்தியடையாத உணவு கால்வாய் தொகுதிக்கு உகந்ததாகவே தாய்ப்பால் அமைந்துள்ளது. எனவே, இலகுவாக சமிபாடையும்.
  3. குழந்தையின் தேவைக்கேற்ப, தாய்ப்பாலில் உள்ள கூறுகளும் மாற்றமடையும். இது குழந்தைக்கு தேவயான புரதம், கொழுப்பு, விட்டமின் கனியுப்புக்களை வழங்கும்.
  4. குழந்தையின் அறிவுத்திறன் கூடும்.
  5. தாய்-சிசு அரவணைப்பு கூடும்.
தாய்க்கு.
  1. பிரசவத்தை தொடர்ந்து பாலூட்டல் மூலம் கர்ப்பபை சுருங்கி- இரத்தம் வெளியேறுவதை குறைக்கும்.
  2. குறைந்த பட்சம் 6 மாதங்கள் பாலூட்டுவதன் மூலம் மார்பக புற்று நோய் ஏற்படக்கூடிய சாத்திய கூறுகள் குறையும்.
  3. என்பு அடர்த்தி குறைவு மற்றும் கருப்பை கழுத்து புற்றுநோய் குறையும்.
  4. குடும்ப கட்டுப்பாட்டு முறையாக கையாளலாம்.
  5. தான் தன் குழந்தையின் பசியை தீர்க்கின்றார் என மன நிம்மதி அடைவார்.
     
ஆரம்பிப்பது எப்போது?
குழந்தை பிறப்புடன் பாலூட்டல் ஆரம்பிப்பது நல்லது. முதலில் சத்து மிகுந்த மஞ்சள் திரவமான ‘Colostrum’ சுரக்கும். குழந்தைக்கு பசி எடுக்கும் போதெல்லாம் பால் கொடுக்கலாம்.
நிறுத்துவது எப்போது?
சரியான கால வரையறை இல்லை. முதல் ஆறு மாதங்கள் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இந்த காலத்தில் நீரோ, வேறு குடிபானங்களோ கொடுக்க கூடாது.

குறைவான பால் இருப்பின் என்ன செய்வது?
பாலூட்டும் போது தான் பால் சுரத்தலும் கூடுகின்றது. இரண்டு மார்பகங்களையும் மாற்றி மாற்றி பாவிக்கவும்.
முலைக்காம்புகளில் மாற்றம் இருந்தால் பாலூட்டலாமா?
நிச்சயமாக முடியும். கிளினிக் செல்லும் போது, அங்குள்ள சுகாதார குழு சரியாக பாலூட்டும் முறையை கற்று கொடுப்பார்கள்.
உங்கள் பெருவிரல்களிடையே முலை காம்பைபிடித்து மேல், கீழ் பக்கமாக இழுக்கவும். ஒரு நாளைக்கு 5 தடவையாவது இவ்வாறு செய்தால் முலைகாம்பு வெளிகொணர்வப்படும். மார்பக பம்பி மூலமும் வெளி கொண்டு வரலாம்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு சில சுகாதார துணுக்குகள்.


  1. சமநிலையான உணவு- அனைத்து ஊட்டச்சத்துக்களுடன்.
  2. விட்டமின்கள் (போலிக்கமிலம்), கனியுப்புக்கள்(இரும்பு, கல்சியம்), ஊசிகள்(Tetanus) பூச்சி மருந்து நேரத்துக்கு உட்கொள்ள வேண்டும்.
  3. பிரசவ கிளினிக் இனை தொடர்ச்சியாக செல்லவும்.
  4. மனநிம்மதியுடன் இருங்கள். மன உளைச்சல் உங்கள் குழந்தையை பாதிக்கும்.
  5. நீர் ஆகாரங்களை அதிகரிக்கவும்.
  6. நடத்தலே சிறந்த உடற்பயிற்சியாகும்.
  7. கட்டாயமாக முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே.
  8. புகைபிடிக்கும் நபர்கள் அருகே இருக்க வேண்டாம்.
  9. எந்தவகையான பூச்சு, விசிறிகளை சுவாசிக்க வேண்டாம்.
  10. உடல் நிறையை கண்காணிக்கவும்.
  11. பிரசவங்களிடையே இடவெளி தேவை. உங்கள் கணவருடன் ஆலோசித்து அடுத்த குழந்தையை பற்றி தீர்மானத்தை எடுக்க வேண்டும். பின்வரும் குடும்ப கட்டுபாட்டு முறைகள்:
ஊசிகள்- பிரசவத்திற்கு 6 கிழமைகளின் பின்.
‘மிதுரி’ –வில்லை -6 மாதத்திற்கு பின்.
லூப்- 6 கிழமைகளின் பின்.
தந்தைக்கான முக்கிய குறிப்புக்கள்


  1. கர்ப்பகாலம் புதிய பொறுப்புக்களை தரும். உங்கள் மனைவியுடன் கதைத்து அவளின் பயத்தை போக்குங்கள்.
  2. உங்கள் மனைவி உங்கள் குழந்தையை தாங்குகின்றாள். இதற்காக உடல், உள ரீதியாக மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளாள். எனவே அவரை புரிந்து நடந்து கொள்ளவும்.
  3. தாயை மனநிம்மதியுடனும் சந்தோசத்துடனும் வத்து கொள்க.
  4. கர்ப்பகாலத்துடன் தொடர்பு கொள்க. அவருடன் வைத்தியரிடம் செல்லுங்கள்; குழந்தைக்கும் தாய்க்கும் ஏதாவது வாங்கி செல்லுங்கள்.
  5. அவளின் உணவு பழக்கங்களை கண்காணித்து துணையாக  இருங்கள்.
  6. அவளுக்கு நடக்க கூடிய நேர அவகாசத்தை தேடி கொடுங்கள்.
  7. வீட்டு வேலைகளில் அவருக்கு உதவுங்கள்.
  8. அவர் அருகே புகைத்தலை தடுக்கவும்.
  9. அதிகளவு மது அருந்துவதிலிருந்து தவிர்த்து கொள்க.
  10. பிரசவங்களிடையே இடைவெளி பற்றி அவரிடம் ஆலோசித்து முடிவெடுக்க.
     

No comments:

Post a Comment