Lord Siva

Lord Siva

Wednesday 31 August 2011

தம்பதியர் எந்த காலங்களில் செக்ஸ் உறவு வைத்திருக்க கூடாது

தம்பதியர் எந்த காலங்களில் செக்ஸ் உறவு வைத்திருக்க கூடாது

கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப் பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத் துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியை க் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண் டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக் கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தை யின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.
* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொ ண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண் டும். அதாவது பிரச வம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசே ரியனா என்று பார்க்க வேண்டும்.
* சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண் ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங் களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண் களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கண க்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்ப தாக மருத்துவர் உத்தரவா தம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.
* குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பா தையில் காயங்கள் ஏற்பட் டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.
* கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவ னுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.
* பிரசவத்திற்குப் பிறகு பெண்ணி ன் உடல்நலம் முற்றிலும் சரி யாகி விட்ட போதிலும், அவளு க்கு உறவில் விருப்பமில்லை எ ன்று தெரிந்தால், அதற்குக் கட்டா யப்படுத்துவது கூ டாது.
* உறவில் ஈடுபடும் போது உடலு றவுப் பாதையில் கடுமை யான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.
* கருச்சிதைவுக்குள்ளானவர்களு ம், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலே யே உறவைத் தொடங்க வேண்டும்.
* மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்கா து என்று பலரும் அந்நாளில் உற வு கொள்ள நினைப்ப துண்டு. ஆ னால் அதை முழுமையாக நம்பு வதற்கில்லை. அந் நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கண வன் -மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய் ப்புகள் அதிகம்.
* பெண் நோய் வாய்ப்பட்டிருந் தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.
 * கைக் குழந்தையிருக்கும் போ து உறவில் ஈடுபட்டால் தாய் ப்பால் இல்லாமல் போய் வி டும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கை யே. குழந்தை பிறந்து, குறுகி ய காலத்திலேயே உறவு கொ ண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலே யே அதைத் தவிர்க்கச் சொல் கிறார்கள்.
* பிரசவித்த பெண்கள் தாய்ப் பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண் டாம். ஏதாவதொரு கார ணத்தால் பால் வற்றிவிட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.

Tuesday 30 August 2011

சர்க்கரை வள்ளிகிழங்கு

சர்க்கரை வள்ளிகிழங்கு

சர்க்கரை வள்ளிகிழங்கு அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலு ள்ள ஒரு என்ஸைம் இ தன் மாவுச்சத்தை, கிழங் கு முற்றியதும் சர்க்கரை யாக மாற்றி விடுகிறது.
சமைக்கும் போது இதன் இனிப்பு இன்னும் அதிக மாகிறது. கிழங்கு வகை யாக இருந்தாலும் இதற் கும் உருளைக் கிழங்கு க்கும் சம்ப ந்தமில்லை.
இது ஒரு அமெரிக்கச் செடி. முதலில் மத்திய, தென் அமெரிக் காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது. மெக்சிகோ பக் கத்தில் உள்ள தீவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆக்ஸி என்று அழைத்தனர்.
கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்து ஸ்பெயி னுக்கு திரும்பி வரும் போது நிறைய பொருள்களை எடுத்து வந்தார். அதில் சர்க்கரை வள்ளியும் ஒன்று. பதினாறாம் நூற் றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இதை இந்தியாவில் அறிமு கப்படுத்தினர்.
வகைகள்: முக்கியமான இரண்டு வகைகள் உள்ளன.
1. நீளமாக இளம் மஞ்சள் தோலுடன் அல்லது சிவப்புத் தோ லுடன் உள்ளே வெள்ளையாக ஒரு வகை. இதன் உள் சதை காய்ந்தாற் போல இருந்தாலும் நீர் அளவு இவற்றில் மிக அதிகம்.
2. வெளியில் சிவப்புத் தோலுடன் உள்ளே ஆரஞ்சு வண்ண சதையுடன் கூடியது. இது கொஞ்சம் மிருதுவாக ஈர ப்பத த்துடன் காணப்பட் டாலும் நீர் அளவு குறை வு. உள்ளே பார்ப் பதற்கு ஆரஞ்சு நிறத்தில் இருப்ப தால் அமெரிக்காவில் இ தைத் தவறாக (சேனைக் கிழங்கு) என்கின்றனர். உண்மையில் சேனை க்கும் இதற்கும் தொடர்பி ல்லை. இந்த வகை இந்தியாவில் அரிது. அமெரிக்கர்கள் விரும்புவது இந்த ஆரஞ்சு சதை கொண்டதைத்தான். ஏனெ னில் விட்டமின் ‘ஏ’ இதில் அதிகம்.
இதைத் தவிர ஊதாக்கலர் சதையுடனும் கிடைக்கிறது. நவம் பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் நன்றி அறிவித்தல் (தேங்க்ஸ் கிவ்விங்க்) பண்டிகையின் போது இந்த வகை சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சீஸனாகும். நம்மூர்களில் பொ ங்கல் (ஜனவரி) மாதம் சீஸன்.
தேர்ந்தெடுப்பது:கையில் எடுத்தால் கனமாகக் கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்த மாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுகத் தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கும். வெளித் தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும் கெட்டுப் போய் இதனடி யில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும்.
வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை அலம்பக் கூடா து. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.
பாதுகாத்தல்:சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரிஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறை ந்து விடும்.
உணவுச்சத்து:அதிகமான உணவுச்சத்து நிறைந்தது. சமை ப்பது சுலபம். ஒருவித இனிப்புடன் ருசி பிரமாதமாக இருக் கும். பச்சையாகவும் சாப்பிடலாம். வேக வைத்து, சுட்டு, வதக்கி, பொரித்து என்று பல வகைகளில் சமைத்து சாப்பிட லாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலும் சாப்பிட க் கூடி யது. இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் உரிக்காமல் சாப்பிடுவது நல்லது.
ஒரு மீடியம் சைஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 130, கொழுப்புச்சத்து 0.39 கிராம், புரோட்டின் 2.15 கிராம், கார்போ ஹைட்ரேட் 31.56 கிராம், நார்ச்சத்து 3.9 கிராம், சோடியம் 16.9 மில்லிகிராம், பொட் டாசியம் 265.2 மில்லி கிராம், கால்சியம் 28.6 மில்லி கிராம், விட்டமின் சி 29.51 மில்லி கிராம், விட்டமின் ஏ-26081 IU.
சமையல் வகைகள்:சாலட், ஜூஸ், சூப்: சர்க்கரை வள்ளிக் கிழங்கைப் பச்சையாகவே துருவி சாலட்டில் சேர்த்தால் ருசியோடு விட்டமின் ‘ஏ’ சத்தும் நேரடியாக கிடைக்கும். ஜூஸாக அரைத்து பச்சையாக சூப்பில் சேர்க்கலாம். ஆரஞ்சு வண்ணக் கிழங்கைத் துருவி சேர்த்தால் சாலட், சூப் சமையல் வகைக்கு வண்ணம் சேர்ப்பதோடு காரட் போல காட்சியளிக்கும்.

அழகு குறிப்பு: மெலிந்த உடல் குண்டாக…

அழகு குறிப்பு: மெலிந்த உடல் குண்டாக…

அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்தில்… உட லில் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. முத லில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண் டும்.
மனசு நன்றாக இருந்தால் புன்ன கை முகமாக… எல்லோரையும் வசீகரிக்கும் முகமாக… அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டு மே… மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். எப்போதுமே மனதும், உட லும் குளிர் ச்சியாகும் விதத்தில் நன்றாக குளிப்பது நல்லது.
உடம்பில் எண்ணை தேய்த்து குளித்தாலும் உடலும், மன தும் குளிர்ச்சியடையும். தினமும் எண்ணை தேய்த்து குளிப் பது இளநரையை தடுக்கும். மேலும் வாத நோய்களை போக் கும். உடம்புக்கும் புத்துணர்வு கிடை க்கும். சருமத்துக்கும் மெருகு கூடும். உடலுக்கு ஆரோக்கிய மும் ஏற்படும்.
அதுமட்டுமின்றி நமது உடம்பில் சேரும் விஷத்தன்மைகளையும் நீக்கும். ஒவ்வொருவரின் உடல் வாகுக்கு தகுந்தாற் போல் எந்த எண்ணையை தேய்த்து குளிக்க லாம் என்பதை ஆயுர்வேதம் கூறுகிறது. அதை அறிந்து உங் களுக்கேற்ற எண்ணையை தேய்த்துக் குளிக்கலாம்.
இன்றைக்கு சோப்பு போட்டு குளிக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். சோ ப்பு இல்லை என்றாலும் அந் த தன்மை உடைய ஷாம்பு வோ அல்லது பவுடரோ தேய்த்தும் குளிக்கின்ற னர். அதற்கு பதிலாக தேன், பால், கற்றாழைச் சாறு கல ந்த கலவையை உடலில் தேய்த்துக் குளிக்கலாம்.
இது அழகு தருவதோடு… உடம்பில் உள்ள அழுக்கையும் நீக்கிவிடும். இந்த கல வையை பயன்படுத்த முடியாதவர்கள், சிறுபயறு, கடலை மாவு, தேன் பயன்படுத்தியும் குளி த்தால் சருமம் மெருகே றும். அழ கு என்றால் அதில் தலைமுடி தான் மிக முக்கிய மாக கருதப்படு கிறது. அதற்காக இப்போதெல்லா ம் டை அடிக்கின்றனர் பலர்.
டை அடிப்பதற்கு பதிலாக 100 கி ராம் மருதாணி தூள், 20 கிராம் நெல்லிக்காய் தூள் ஆகியவற் றுடன் சிறிதளவு தண்­ணீர் சேர் த்து ஊற வைக்கவும். காலையில் முடியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவினால் அல் லது குளித்தால் நரையை போக்க இது உதவும்.
கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள பொருள்தான் பொடுகு க்கு காரணம். சீப்பு, டவல் ஆகிய வற்றை அடிக்கடி சுடுநீரில் கழுவி பயன்படுத்தவும். அடிக்கடி எண் ணை தேய்த்து தலை முடியை அலசவும். ஆரோக்கிய  மான உணவுகளை சாப் பிடவும்.
இன்றைக்கு நடுத்தர வயதுள்ள வர்களில் பெரும்பாலும் டை அடி க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சீக்கிரத்தில் அவர்களுடைய தலைமுடி நரைத்து பஞ்சு மாதிரி ஆகிவிடும். இதற்கு காரணம் அமோனியா சேர்த்த டை தான் காரணம். கறுப்பு நிறம் கொடுக்கும் டைகளில் தீமைகள் அதிகம். புதிய முடி கள் ஆரோக்கியமாக வளர்வதை இது தடுக்கும். டைக்கு பதில் கண்மை யை பயன்படுத்தி முடியை கறுப் பாக்கலாம்.
நிறைய காய்கறிகள் சாப்பிடுவோ ருக்கு சருமம் பளபளப்பாக இருக் கும். இதனால் அவர்கள் எப்போ தும் அழகாக இருப்பார்கள். கேரட், கரு ணைக்கிழங்கு, வெங்காயம், கீரை, புடலங்காய் இதெல்லாம் சாப்பிட்டால் உடல் வனப்பு கூடும்.
உடல் மெலிந்தவர்கள் குண்டாக மாறுவதற்கு பல முயற்சிகளை எடுப்பதற்கு பதில்… 101 நாளில் எளி தாக குண்டா கலாம்.
50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து… அதனுடன் ஒரு மே சைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து…. 101 நாட்கள் தொட ர் ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகி விடும். ஈஸ்ட்ரோஜென்னை அதிகரிக்கும் சக்தி வெந்த யத்துக்கு உண்டு.
குண்டான உடம்புடன் கஷ்டப் படுபவர்கள், உடல் மெலிய… 50 கிராம் கொள்ளை வறு த்து… பொடியாக்கி தினமும் சாப் பிடவும். இது உடலில் உள்ள தண்ணீ­ரை நீக்கி உடல் எடை யை குறைத்துவிடும். உங்களுடைய உடல் சரியான நிலை க்கு வந்தவுடன் கொள்ளு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அல்லது தொடர்ந்து சாப்பிட்டாலும் உட லுக்கு நல்லதே.

குழந்தை இல்லையா ?மூலிகை வயாக்ரா,குடிபழக்கம்;

குழந்தை இல்லையா ?
         பெண்களின் கர்பப்பை கோளாறுகள் ,கருமுட்டை வளர்ச்சிஇன்மை,கருசிதைவு  போன்ற குறைபாடுகள் நீங்கி குழந்தை பாக்கியம் பெற 1 மாத மருந்து போதும்.பலன் இல்லையேல் பணம் வாபஸ்.
ஆண்களுக்கு;
        எழுட்சிஇன்மை,வளர்சிகுறைவு,சிறுநீரில் விந்து வெளியேறல் போன்ற குறைபாடுகளுக்கு முழுமையான நிவாரணம்.மூலிகை வயாக்ரா கிடைக்கும்.
உடல் எடை குறைய:
    உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புசத்து,நீர்சத்து நீங்கி  மாதம் 3  முதல் 5  கிலோ எடை குறையலாம்.
குடிபழக்கம்;
    குடிபவர்களுக்கு தெரிந்தும்,தெரியாமலும் கொடுக்கலாம்.
.     கொரியர் மூலம் மருந்துகள் கிடைக்கும்.

http://smandsmherbals.com
                    
               9489404733

Monday 29 August 2011

108 சித்தர்களின் பெயர்கள்

108 சித்தர்களின் பெயர்கள்

திருமூலர்
திருமூலர்
1. திருமூலர்.
2. போகர்.
3. கருவூர்சித்தர்.
4. புலிப்பாணி.
5. கொங்கணர்.
6. மச்சமுனி.
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.
8. சட்டைமுனி சித்தர்.
9. அகத்தியர்.
10. தேரையர்.
11. கோரக்கர்.
12. பாம்பாட்டி சித்தர்.
13. சிவவாக்கியர்.
14. உரோமரிசி.
15. காகபுசுண்டர்.
16. இடைக்காட்டுச் சித்தர்.
17. குதம்ப்பைச் சித்தர்.
18. பதஞ்சலி சித்தர்.
19. புலத்தியர்.
20. திருமூலம் நோக்க சித்தர்.
21. அழகண்ண சித்தர்.
22. நாரதர்.
23. இராமதேவ சித்தர்.
24. மார்க்கண்டேயர்.
25. புண்ணாக்கீசர்.
26. காசிபர்.
27. வரதர்.
28. கன்னிச் சித்தர்.
29. தன்வந்தரி.
30. நந்தி சித்தர்
31. காடுவெளி சித்தர்.
32. விசுவாமித்திரர்
33. கௌதமர்
34. கமல முனி
35. சந்திரானந்தர்
36. சுந்தரர்.
37. காளங்கி நாதர்
38. வான்மீகி
39. அகப்பேய் சித்தர்
40. பட்டினத்தார்
41. வள்ளலார்
42. சென்னிமலை சித்தர்
43. சதாசிவப் பிரம்மேந்திரர்
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்
45. ராகவேந்திரர்
46. ரமண மகரிஷி.
47. குமரகுருபரர்
48. நடன கோபால நாயகி சுவாமிகள்
49. ஞானானந்த சுவாமிகள்
50. ஷீரடி சாயிபாபா
51. சேக்கிழார் பெருமான்
52. ராமானுஜர்
53. பரமஹம்ச யோகானந்தர்
54. யுக்தேஸ்வரர்
55. ஜட்ஜ் சுவாமிகள்
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார்.
58. சிவப்பிரகாச அடிகள்.
59. குரு பாபா ராம்தேவ்
60. ராணி சென்னம்மாள் (பெண் சித்தர்)
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
62. குழந்தையானந்த சுவாமிகள்.
63. முத்து வடுகநாதர்.
64. இராமதேவர்
65. அருணகிரிநாதர்.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்
67. மௌன சாமி சித்தர்
68. சிறுதொண்டை நாயனார்.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள்.
70. வல்லநாட்டு மகாசித்தர்.
71. சுப்பிரமணிய சித்தர்.
72. சிவஞான பாலசித்தர்.
73. கம்பர்.
74. நாகலிங்க சுவாமிகள்.
75. அழகர் சுவாமிகள்.
76. சிவஞான பாலைய சுவாமிகள்
77. சித்தானந்த சுவாமிகள்.
78. சக்திவேல் பரமானந்த குரு
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
80. அக்கா சுவாமிகள்
81. மகான் படே சுவாமிகள்
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
83. பகவந்த சுவாமிகள்.
84. கதிர்வேல் சுவாமிகள்.
85. சாந்த நந்த சுவாமிகள்
86. தயானந்த சுவாமிகள்
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.
89. வேதாந்த சுவாமிகள்
90. லஷ்மண சுவாமிகள்.
91. மண்ணுருட்டி சுவாமிகள்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).
94. கோட்டூர் சுவாமிகள்.
95. தகப்பன் மகன் சமாதி
96. நாராயண சாமி அய்யா சமாதி
97. போதேந்திர சுவாமிகள்
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.
99. வன்மீக நாதர்.
100. தம்பிக்கலையான் சித்தர்
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
102. குகை நாச்சியார் மகான்.
103. வாலைகுருசாமி.
104. பாம்பன் சுவாமிகள்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.
106. பெரியாழ்வார் சுவாமிகள்
107. மாயம்மா (பெண் சித்தர்)
108. பரமாச்சாரியார்.

Sunday 28 August 2011

பெண்ணைப்பற்றிய உளவியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள்

பெண்ணைப்பற்றிய உளவியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள்

அழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?, தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம்?, பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார் கள்?, ஆண்கள் எந்த விஷயத்தில் கோட் டைவிடுகிறார்கள்? இந்தக் கேள்விக ளுக்கெல்லாம் விடை தெரிந்துகொள்ள ஆர்வமா?
உளவியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே…
* பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேர த்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போ னில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறா மல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்க ளின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப் படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.
* ஆண்கள் பொய் பேசினால் பெண் கள் உடனே கண்டுபிடித்து விடுவா ர்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்ச ரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கி றார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என் னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.
* குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வா னத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண் கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொ ல்லிவிட்டு மறந்துவிடுவார்க ள்.
* ஆண்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக் கும். சுயநலவாதிகள். ஆனால் பெண்க ளுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.
* உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர் களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

* ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வே ண்டும். கூடு தலாக சந்தோ ஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வே ண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழு துபோக்கு, நல்ல சந்தோ ஷம்… இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடை வார்கள்.
* பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசை களையும் ஒளிவுமறைவாக வெளிப்ப டுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்’. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார் கள். ஆசையையும் கொட்டித் தீர்த் துவிடு வார்கள்.
* பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனா ல் ஆண்கள் எதையும் யோசிக் காமல் செய்வார்கள். – சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதி விலக்கான வர்களாகவும் இருப்பார்கள்.

அழகு குறிப்பு: அழகு என்பது இளமையுடன் முதுமையை எதிர்கொள்வதே!

அழகு குறிப்பு: அழகு என்பது இளமையுடன் முதுமையை எதிர்கொள்வதே!

இயற்கையின் படைப்பில் அனைவரும் அழகுதான். அழகு என்பது நிறத்தால் தோ ற்றத்தால், வருவது அல்ல. உள்ளத்தின் தூய்மையே, அன்பே முகத்தில் அழகை, அமைதியை வெளிப் படுத்தும்.
அதற்காக தோற்றத் தை சீர்கேடாக வைத் துக் கொள்ளலாமா என்று கேட்கவேண்டாம்… ஒவ்வொரு வரும் தன் மேனியை பேணிக்காத்து நோயின்றி என்றும் இளமையுடன் முதுமையை எதிர்கொள்வதே அழகு.
அனைவரும் தன் தோற்றத்தை அழகுபடுத்திக் கொள்ளவே விரும் புவர். அதிலும் இளம் பருவத்தினரு க்கு தன்னை அழகு படுத்திக் கொள் வதில் நாட்டம் அதிகம் இரு க்கும்.
அதற்காக பல ரசாயனம் கலந்த கிரீ ம்களைத் தடவி தன்னை அழகுபடு த்திக் கொள்வர். இது சிலருக்கு அல ர்ஜியை ஏற்படுத்திவிடும். முகத்தி ல் சொறி, கருப்புத் திட்டு, முகச் சுருக்கம், கண்களில் கருவளையம், முகப்பரு, தேமல் என பல வகை யான பாதிப்புகள் ஏற்படும். 
சிலருக்கு பலஹீனத்தாலும், ஈரல், இருதயம், குடல் பாதிப்புகளாலும் இம்மாதிரியான அலர்ஜி உருவாகலாம். முகத்தின் சருமம் மிகவும் மென்மையா னது.  அதனாலே யே எந் த ஒரு நோயும் முதலில் முகத்தில் பாதிப்பை ஏற் படுத்துகின்றன. மனிதனின் அகத்தை மட்டுமல்ல, நோயையும் கூட முகத்தில் பார்த்து விடலாம்.
இப்படி வெளிப்புறத்தாலு ம், உட்புறத்தாலும் ஏற்ப டும் பாதிப் பால் உண்டான தோல் அலர்ஜி நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்கள் இரு வகை யான மருந்துகளைக் கொடுப்பார் கள்.
ஒன்று மேற்பூச்சு மருந்துகள், மற்றொன்று உட்கொள்ளும் மருந்துகள். 
அப்படி மருந்துகளைச் சாப்பிடும் போ தோ அல்லது பூசும் போதோ பாதிக்க ப்பட்ட உறுப்புகள் குணமாகும். தோ லில் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.
மங்கு:
சிலருக்கு மூக்கின் மேல் பகுதியில் மச்சம் போல் கருப்பாக படர்ந்து கா ணப்படும். இதனை மங்கு என்பார்க ள். முகத்தில் மங்கு வர முக்கியக் காரணம் நாளமில்லாச் சுரப்பிகளின் முரண்பாடாகும். நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கொழுப்புச் சத்துள்ளதால் அவை உடலில் உள்ள நாள மில்லாச் சுரப்பிகளை பாதிக்கி ன்றன. இதனால் மங்கு முகத்தில் தெரிகிறது.
மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளால்கூட ஹார்மோன்கள் பாதிப் படையும். குறிப்பாக மெ னோபாஸ் காலங்களில் மூக்கில் மங்கு உண்டா கும். இந்த மங்கு தோன் றினால் முக அழகு மாறி விடும். இதனால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளா கி உடல் சோர்ந்து விடு வார்கள். இப்பிரச்சி னை தீர இதோ ஒரு எளிமை யான மருத்துவ முறை…
கோக்டம் – 10 கிராம் எடுத்து நார்த்தம் பழச் சாறில் ஊற வை த்து அரைத்து சிறிது தேன் கலந்து முகத்தில் தடவ வேண் டும். சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்து உலர் ந்தபின் முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் மங்கு மறை யும். (குறிப்பு – முகத்தில் தடவும் போது மங்கு ஏற்பட்ட பகுதியில் அழுத்தமாகத் தடவக் கூடாது)
சருமம் பளபளக்க:
பச்சைப் பயறு -  250 கிராம்
மஞ்சள் -  100 கிராம்
வசம்பு -  10 கிராம்
எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி குறைந்து பள பளப்புடன் காட்சியளிக்கும்.
அழகைத் தக்க வைக்க:
* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்­ணீ ராவது அருந்த வேண்டும். 
* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயி ல் பொரிக்கப்பட்ட உணவுகள், கொ ழுப்புச்சத்து அதிகம் உள்ள பொரு ட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.
* மென்மையான உணவுகளை அதி கம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண் டும்.
* தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடி க்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத் தும்.
* கோபம், மன அழுத்தம் இவற் றைக் குறைத்துக் கொள்ள வேண் டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப் புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், தேஜஸூம் அதிகரி க்கும்.

Saturday 27 August 2011

பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி

“உ” எனும் உகரம் பிள்ளையார் சுழியாய் எழுதப்படுகிறது. நாழியின் குறியீடாகவும் உள்ளது. இந்தப் பிள்ளையார் சுழி குறித்து பல்வேறு கருத்துக்கள் வழங்குகின்றன. முன்னோர் கள் “உ” என்று முதலில் எழுதி அடுத்து சிவமயம் என்று எழுதுவார்கள். தற்போது இந்த வழக்கம் மறைந்து விட்டது. ஆனால் இன்றும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சாதியினர் உ. சிவமயம் என்று எழுதுவதை வழக்கமாகக் கொண்டு ள்ளனர். வேறு சிலர் “உ” என்று பிள்ளையார் சுழியை மட் டும் போட்டு எழுதத் தொடங்கும் வழக்கத்தைக் கொண்டுள் ளனர். இந்த “உ” குறியீட்டை சிலர் நாளை (தேதி) க் குறிக் கவும் பயன்படுத்துகின்றனர். இரண்டு என்கிற எண்ணுக்கும் இதே எழுத்து, குறியீடாகவும் அமைந்துள்ளது.

SM AND SM HERBALS: 11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கும் சூப்பர்செப்

SM AND SM HERBALS: 11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கும் சூப்பர்செப்: 11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கும் சூப்பர்செப் Posted on August 27, 2011 by muthukumar அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயனாக மாவ...

11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கும் சூப்பர்செப்

11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கும் சூப்பர்செப்

அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயனாக மாவு அரைப்பதற்கு, துணி துவைப்பதற்கு என பல வேலைகளை பகிர்ந்து கொள்வதற்கு இயந்திர ங்கள் வந்து விட்டன. தற்போது சமையலறைக்கு வந்துள்ள புதிய வரவு சூப்பர்செப். வறுத்தல், கொதிக்க வைத்தல், வேக வைத்தல் என பல வேலைகளை செய்யும் இந்த நவீன கருவி ஏறத்தாழ 11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கிறது. தேவையான சமைக்கும் பொருள்களை அதற்கென்று உள்ள பாத்திரத்தில் போட்டு விட்டு பட்டனை தட்டி விட் டால் போதும். சுமார் 45 முதல் 50 நிமிடங்களில் சுவையான உணவு தயா ராகி விடும்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 24 மணி நேரங்களுக்கு பின் சமையல் செய்ய வேண்டியதை முன்கூட்டியே புரோகிராம் செய்யும் வசதி உள்ள து. மேலும் உணவு தயாரானவுடன் அதனை வெளியே எடுக்காமல் விட்டு விட்டாலும் பொறுப்பாக நீண்ட நேரம் உணவை சூடாக வைத்து கொள் ளும் பணியை மேற்கொள்கிறது. சிறிய கிண்ணம், நீரை சூடாக்க பாத்தி ரம் மற்றும் சமையல் புத்தகம் ஆகியவற்றுடன் விற் பனைக்கு வரும் இதன் சிறப்பம்சங்களை பட்டியலிட்டால், தேவையல்லாத இடத்தை அடைக்கும் அதிகப்படியான பாத்திரங்களை சமைய லறையில் அடுக்க வேண்டாம். சமைத்து முடிக்கும் வரை அங்கேயே இரு க்க வேண்டாம். மேலும் இதன் வடிவமைப்பு எங்கும் கொண்டு செல்லும் வகையில் அமை ந்துள்ளது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

தேநீர் சொல்லும் உண்மைகள்!

தேநீர் சொல்லும் உண்மைகள்!

டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `டீ சாப்பிடுவது நல்ல தல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் சொல் வதுண்டு’ இவற்றில் எது உண்மை?…

டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல.

உண்மை: ஒரு கோப்பை காபியில் இரு க்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்ëகு க்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்து க்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக் கும்.

டீ குடிப்பதால் பல்லில் கறை ஏற்படும்.

உண்மை: டீயில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மண்ணில் இருக்கும் ப்ளோரைடை `டீ’ச் செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது. எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக டீ இருக்கிறது. பற்களில் `காரை’ படிவதையும் டீ தடுக்கிறது. பல் லை பாது காக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண் டிய அவசியம் இல்லை. டீ குடித்தாலே போதும்.

டீ குடிப்பது வயிற்றுவலிக்கு காரணமாகும்.

உண்மை: வயிற்றுவலி (அசிடிட்டி) ஏற்பட டீ கார ணமாக இருப்பது இல்லை. உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும்போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறு வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே ஆரோக் கியமான தேநீரைப் பருகு ங்ëகள்.

டீ எலும்புகளுக்கு கெடுதல் விளைவிக்கும்.

உண்மை: டீயில் உள்ள காபின், புளோரைடு போன்ற பொருட்கள் எலும் பை பலவீனப்படுத்துவதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆ னால் அண் மைக்கால ஆராய்ச்சிகளில் டீ குடிப்பது எலும்புக்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது. வயதான பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தினந்தோறும் 3 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிக்கும் பெண்களின் எலும்புகள் டீ குடிக்காத பெண் களின் எலும்புகளை காட்டிலும் நல்ல உறுதியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே குடிக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைக்கும். தினந்தோறும் 4 கப் பால் கலந்த டீ குடித்தால் நமது அன்றாட கால்சியம் தே வையில் 21 சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டீ குடிப்பதனால் இரும்பு சத்து உடலில் சேர்வது குறைகிறது.

உண்மை: இறைச்சி அல்லாத உணவுகளிலிரு ந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேரு வதை டீயில் இருக்கும் `ப்ளேவோனாய்ட்ஸ்’ தடுப்பதாக நம்பப்படுகிறது, இருப்பினும் ஆரோ க்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேரு வதை டீ தடுப்பதில்லை, ஆரோக்கியமான உணவை எடுத் துக் கொள்பவர்க ளுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது. டீ பிரியர்க ளாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவ ர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடை யே டீயை குடியுங்ëகள், சாப்பாட்டுக்குப் பின்பு டீ யை குடிக்க வேண்டாம்.

உடலில் தண்ணீர் பற்றாக்குறை எனப்படும் `டிஹைட்ரேஷனை’ தேநீர் ஏற்படுத்தும்,

உண்மை: மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அள வுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடி த்தாலும் பூர்த்தியாகிறது. தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது.

டீ குடித்தால் உடல் எடை கூடும்

உண்மை: டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித் தால் உடல் எடை சீராக இருக்கும். பால் மற்றும் சர்க்கரை இல் லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.
மேற்கண்டவை, புதிய ஆய்வுத் தகவ ல்கள். இதுபற்றி இந்துஸ்தான யூனிலி வர் ரிசர்ச் சென்டரின் இயக்குனர் கவுதம் பானர்ஜி கூறுகையில், “மிகச்சிறந்த இய ற்கை உணவுப் பொருட்களில் டீயும் ஒன்று. ஆரோக்கியமான பானம் டீ. இதி ல் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ், கேட்சின்ஸ் மற்றும் தியானைன் போன்ற பல விதமான ஆரோக்கிய பொருட்கள் இதயத்துக்கும், செரி மான உறுப்புகளுக்கும், சருமத்துக்கும் நல்ல சக்தியை அளிக்கின்றன. உடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற் றும் வாய் ஆரோக்கி யத்துக்கும் டீ ஏற்றது. டீ, உடலில் தண்ணீர் பற்றா க்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது” என்கிறார்.

Thursday 25 August 2011

அழகு குறிப்பு – அழகிய கூந்தலுக்கு . . .

அழகு குறிப்பு – அழகிய கூந்தலுக்கு . . .

தலை முடி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி பின் தலையில்பொடுகு,புண்,அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது..
உலர்ந்த ஆரஞ்சு தோல்-50 கிராம், வெந்தயம்-50 கிராம், பிஞ்சு 
கடுக்காய் – 10 கிராம், வால் மிளகு – 10 கிராம், பச்சை பயறு – கால் கிலோ…
எல்லாவற்றையும் கலந்து நன்கு காய வைத்து பின் அரை த்துக் கொள்ள வேண்டும்.

இதை வாரம் இரு முறை தலை யில் நன்றாகத் தேய்த்துக் குளி த்து வந்தால் பொடுகு, புண், அரி ப்பு போவதுடன் தலை யும் சுத்த மாகும். மேலும் கூந்தல் வாசனை யாகவும், பளபளப்பாகவும் மா றும்.
செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத் துத் தலைக்குக் குளிக்க, தலை முடி மூலிகை குளியல் போல மிகவும் வாசனையுடன் இருக்கு ம். இதைபோட்டு குளித்த பிறகு எண்ணெய், சீயக்காய் எது வும் தேவையி ல்லை. கூந்தலும் சுத்தமாகிவிடும்.

இனிய குரலுக்கு . . .

இனிய குரலுக்கு . . .

 
பிறந்த ஒருவருடத்தில் இருந்து இன்று வரை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். “பேச்சு எப் படி வருகிறது?” என்ற உடல் இயக் க விஞ்ஞானம் எத்தனைப் பேரு க்கு தெரியும். இதோ அதைத் தெரி ந்து கொள்வோம்.
நுரையீரலில் இருந்து காற்று வரு கிறது. அப்போது குரல் நாண்கள் ஒன்றோடு ஒன்று இணைவதால் அதிர்வு ஏற்படு கிறது. அதை நாம் வார்த்தைகளாக்கி வெளிப்படுத்து கிறோம். இதுதான் பேச்சு. நுரை யீரலில் இருந்து வெளிப் படும் காற்று, தலை-நெஞ்சு-கழுத்தில் நிலைகொண்டு பல்-உதடு-நாக்கு-மூக்கு- அண்ணம் போன் றவைகளில் முறையான அசைவை ஏற்படுத்தும்போது, அது வார்த்தைகளாக வெளி வருகிறது. நுரையீரலில் இருந்து காற்று எழும்பி வரும்போது குர ல் நாண்கள் இணையாமல் பிரி ந்தே நின்றால், காற்றுத் தான் வரும். குரல் வராது.
குரல் நாண் இணையும் செயல் பாடு இருவகைகளில் நடக்கிற து. ஒன் று: நரம்பு, தசை இயக்க த்தால் நடைபெறுவது. இரண்டு: அடி வயி ற்றில் இருந்து வரும் காற்றால் குரல் நாண் இயங்கு வது.
நாம் பேச நினைக்கும்போது அந்த தகவல் மூளைக்குப் போகி றது. உடனே தொண்டை, கபால நரம்புகள் மூலம் தசையை இயக்கி, குரல் நாணை இணையச் செய்யும். இது ஒரு வகை. மே லே கூறியபடி மூளை, நரம் புகள் எல்லாம் இயங் காமல் தன்னிச் சையாக பேச விரும்பி னால் அதற்கு அடிவயி ற்றில் காற்றை உருவாக்கும் பயிற்சி தேவை. அதைத்தான் நாம் மூச்சு பயிற்சி என்கிறோம்.
மூச்சுப் பயிற்சியைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் குரல் பற்றி இன்னும் கூடுதலாக சில தகவல்களையும் தெரிந்து கொள் வோம்.
12- வயது வரை ஆண், பெ ண் இருபாலருக்கும் பெண் குரல் போல்தான் இருக் கும். அதை நாம் சரியாக அடையாளங் கண்டுகொள் வதில்லை. மழ லை என்பது பெண் குரல் தான். 13-14 வய தில் ஆண் களின் குரல் நாண் நீளமடையும். அப்போது குரல் வளை விரி வடைந்து, குரல்வளையில் உள்ள ஒரு குருத் தெலும்பு தள்ளிக் கொண்டு வெளியே வரும். ஆண்களின் தொண்டையில் வெளி ப்படையாக நீண்டு கொ ண்டிருக்கும் இதை “ஆ டம்ஸ் ஆப்பிள்” என் பார்கள்.
பெண்களுக்கு குரல் நா ண் நீளவும் செய்யாது. விரிவடையவும் செய் யாது. 16- வயதிற்குப் பிறகும் ஆண்களுக்கு பெண் குரல் இருந்தால் அது “பியூபர் போனியா” என்ற கோ ளாறாக கருதப்படுகிறது. இதற்கு குரல் நாணை இழுக்கும் சிகிச்சை தேவை. ஒரு நாளில் இந்த சிகிச்சையை செய்து விடலாம் என்றாலும், தொ டர்ந்து மூன்று மாத ங்கள் “பீச் தெரபி” அல்லது “வாய் ஸ் தெரபி” பயிற்சி பெற வே ண்டும்.
இறைவன் கொடுத்த பெரு ஞ்செல்வம் குரல். கைரே கையில் தனித்தன்மை இரு ப்பது போல் ஒவ்வொருவ ரின் குரலிலும் அடையாளம் காணும் அளவிற்கு தனித் தன்மை இருக்கும். இந்த குரலை வைத்துத்தான் ஆசிரிய ர்கள், பேச்சாளர்கள், வக்கீல்கள், பாடகர்கள், விற்பனை பிரதிநிதிகள் போன்ற பலரும் முறையாக பணம் சம்பாதித்து வாழ்க்கை நடத்து கிறார்கள்.
குரலில் மாற்றம் ஏற்பட என்ன காரணம்?
ஒவ்வாமை, அழற்சி, உணவுக் குழாயில் ஆசிட் உரு வாகுதல், குரலை முறையற்று பயன்படுத்துதல், அதிகமாக பயன்படுத்துதல், குரல்வளையில் கட்டி உருவாகுதல், குரல் வளையில் புற்று நோய் ஏற்படுதல், குரல் வளை நரம்பு செல்களில் மாற்றம் ஏற்படு தல், மனோரீதியான பாதிப்பு, பிறவி நோய் குறைபாடுகள், தைராய்டு, குரல்வளை வா தம், நரம்பு தளர்ச்சி போன்றவைகளால் குரல் மாற்றம் ஏற்படலாம்.
நுரையீரல் சளியாலும் குரல் கெடும். காசநோய், தொழு நோய், பால்வினை நோய்க ளாலும் குரல் பாதிப்பு ஏற் படக் கூடும். தற்போது பான் பராக் மெல்லுகிறவர்களில் பெரும் பாலானவர்கள் குரல் வளை பாதிப்பிற்கு உள்ளாகு கிறார்கள்.
குரல்வளையில்- குரலில் பாதிப்பு ஏற்படும்போது அந்த பாதிப்பு எதனால் ஏற்படுகி றது என்பதை முதலில் கண் டறிய வேண்டும். நோயாளி யின் முழு உடல் பிரச்சினைகளையும் கேட்டறிதல், ரத்த பரி சோதனை, தொண்டைச் சளி பரிசோதனை, குரல் பரிசோத னை, எக்ஸ்-ரே, எண்டோஸ்கோப் போன்றவைகளில் தே வை ப்படுபவைகளைச் செய்து பாதிப்பைக் கண்டறிய வே ண்டும். மருந்து அல்லது ஆப ரேஷன் அதற்கு தீர்வாக இரு க்கும்.
குரலைத் தொழிலாகக் கொ ண்டவர்கள் விரும்பினால் குர லை பாதுகாக்கவும் முடியும். குரலை தேவைப்படுத்துவது போல் இனிமையாக வளப்படுத் திக்கொள்ளவும் முடியும். ஆசிரி யர்களில் 20 சதவீதம் பேர்க ளுக்கு குரலில் பிரச்சினை இரு க்கிறது. இய ல்புக்கு மீறி சத்தம் போட்டு வகுப்பு நடத்து வது, ஓய்வில் லாமல் வீட்டிலும் டியூஷன் நடத்துவது, வகுப் புகளில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தை பிரயோகம் செய்தல் போன் றவை களால் அவர்கள் குரலில் நெருக்கடி ஏற்படுகிறது. குரல் நெரு க்கடி ஏற்படும் போது நினைத்த படி வேகமாக பேச முடி யாது. திடீ ரென்று பேச முடி யாமல் போனது போல் தோன்றும். பேசும்போது அல்லது பேசி முடித்த பின்பு வலி, சோர்வு ஏற்படும். தொண்டையை அடிக்கடி கனைக்க வேண் டியதுபோலவும் இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைக ளை கட்டுப்படுத்தவும், தீர்க்கவும் மூச்சுப் பயிற்சி அவசிய மாகிறது.
மூச்சு நான்கு வகைப்படுகிறது.
* கழுத்து மூச்சு.
* நுரையீரல் மூச்சு.
* உதரவிதான மூச்சு.
* எல்லா உறுப்புகளுக்குமான முழு மூச்சு.
இதில் முழு மூச்சே சிறப்பானது. இந்த பயிற்சியை முறை யாகப் பயின்று வீட்டிலும் மேற்கொண்டால் குரலில் மேம் பாடு கிடைக்கும். கூட வே ஒட்டுமொத்த உடலு க்கும், மனதி ற்கும் ஆரோக்கியம் கிடைக் கும். முதுகுவலி, தலை வலி நீங்கும். மூளை செயல்திறன் அதிக ரித்து, மன அழுத்தம் நீங்கும். நினைவாற்றல் அதிகரி க்கும். கிட்னி நன்றாக செய ல்படும். ரத்த அழுத்தம், ஆஸ்துமா தொந்தரவு குறையும். நன்றாக தூக்கம் வரும். இப்படி ஏராளமான பலன்கள் உள் ளன. ஆசிரி யர்கள், வக்கீல்கள், பாடகர்கள், விற்பனை பிரதி நிதிகள் இந்த பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டு  கிறார்கள்.
குரலைத் தொழிலாகக் கொண்டவர் கள் கவனிக்க…
* பேசுவதற்கு முன்பு காபி, மது போன் றவைகளை அருந்தக் கூடாது. உடல் ஒத்துக்கொள்கிறவர்கள் எலுமிச்சை சாறு அருந்தலாம். பேசுபவர் களுக்கு உமிழ்நீர் நன்றாக சுரக்க வேண்டும். அதற்காக அவர்கள் தினமும் 4 லிட்டர் தண்ணீர் பருகவேண்டும். திடீரென்று தொண்டை வற ண்டு போனால் நுனி நாக் கினை மடித்து லே சாக கடிக்க வேண் டும். அவ்வாறு செய் தால் உடனடியாக உமிழ்நீர் ஊறும்.
* புகை பிடிக்கக் கூடாது. மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும். சாக்லேட் சாப்பிடக்கூடாது. பால், ஐஸ்கிரீம் போன்றவைகளையும் தவிர் க்க வேண்டும்.
* ஆசிரியர்கள் பாடம் நடத் தும் வகுப்பறைகள் ஈரப்பத மாக இருக்கவேண்டும்.
* பாடம் சொல்லிக் கொடுக் கும்போது, தொண்டையை சரி செய்வதாக நினைத்துக் கொ ண்டு அடிக்கடி கனைக்க க்கூ டாது.
* போனிலும், வீட்டிலும் கத்திப் பேசக்கூடாது. செல்போனில் பேசும் நேரத்தை பெருமளவு குறைக்க வேண்டும்.
* சத்தமுள்ள இடத்தில் நின்று கொ ண்டு பேசக்கூடாது.
* ஒரே நேரத்தில் இரண்டு வேலை களைப் பார்க்க தொண்டை சிரமப் படும். அதனால் சாப்பிடும்போது பேசக்கூடாது. பேசும் போது சாப்பிடவும் கூடாது.
* பேசுவதில் சிரமமோ, சோர்வோ ஏற்பட்டால் உடலின் உள் உறுப்புகளுக்கும், வெளி உறுப்புகளுக்கும் பயிற்சி தேவைப் படும். சிகிச்சையும் தேவைப்படும்.