Lord Siva

Lord Siva

Thursday 1 September 2011

கணவன் – மனைவி உறவு ஒரு கட்டத்தில் முறிந்து விடுகிறது ஏன்????

கணவன் – மனைவி உறவு ஒரு கட்டத்தில் முறிந்து விடுகிறது ஏன்????

ஒருசிலர் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல தோன்றும். அதே சம யம் ஒரு சிலர் எப் போது பேசி முடிப்பார் என்று இருக்கும். மனி தர்களிடையே உற வை வளர்ப்பதிலும், பிரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது பேச் சு. குறிப்பாக ஆண் – பெண் காதல் உறவில் அன்பை பெருக்குவது மட்டுமல்ல… வெறுப்பை அடர்த்தி யாக்குவதும் அதே பேச்சுதான்.
ஒருவரை ‘விமர்சனம் செய்யும்போது அதை அவரது மனம் புண் படாதவாறு இனி மையுடன் கூற வே ண்டும் என் பதையே வள்ளுவர் ‘கடி தோச்சி மெல்ல எறிக’ என்று கூறியுள்ளார். இனிய உறவு களுக்கான தா ரக மந்திரமாகவும் இதைச் சொல்லலாம். கனி போல இருக்கும் இனிய சொற்களை விடு த்து காய்போல பேச்சுக் களை பேசுவதாலே திசைக்கொருவராக சிதைந்து கடைசியில் யாருமற்றவர்களாக நிற்க நேரிடுகிறது.
அன்பை விதைக்கலாம்
பேச்சு என்பது உறவு களுக்குள் அன்பை விதைக்க வேண்டும். ஆனால் ஒரு சில குடும்பங்களில் உற வை சிதைக்கிறது. எத ற் கெடுத்தாலும் எரிந் து விழுவது, குதர்க்க மாகப் பேசுவது, குத்தி க்காட் டுவது, எரிச்சல் வரவ ழைக்கும்படி பேசுவது என்பது பல தம்பதிகளுக்கு இயல்பான குணமாக இருக்கிறது. அதுவும் ஆணா திக்க சிந் தனை கொண்ட பல ஆண்களுக்கு, ‘பெண்கள் நம் அடிமை கள்’ என் கிற நினைப்பு இருப்பதால்… பெண்க ளிடம் கனிவுடனோ, அன்புட னோ பேசுவ தே இல்லை. இத்தகை யோரிடம் பெண்களு க்கு பயம் ஏற்படுமே தவிர … உன் னதமான அன்பு இருக்கவே முடி யாது!
பெண்களும் இதற்கு விதி விலக்கு இல்லை முள் குத்துவது போல் பேசும் பெண்களும் இருக்கத் தான் செய்கிறார் கள். இவர்கள் அன்பின் ரகசியம் அறியாதவர்கள். காதலின் மகத்துவம் தெரி யாதவர்கள். இயந்திரம் போல் வாழ்க்கை நடத்தும் ஜீவன்கள் இவர்கள்.
இதயங்கள் பேசவேண்டும்
இதயங்கள் பேசிக் கொள் ளாமல் வெறும் உதடுகள் மட்டும் பேசிக் கொண்டால்… விளை வுகள் மோசமாகத்தானே இருக்கும்! பொது வாகவே கணவன்-மனைவி இருவரிடையேயான உரை யாடல்கள், ஆண்டுகள் செல்லச் செல்லக் குறைகின்றன என்று தான் ஆரா ய்ச்சி முடிவுகள் சொல்கின் றன.
பேச வேண்டிய எல்லாவற்றை யுமே முதல் சில ஆண்டுகளிலே யே பேசி முடித்து விடுகிறார்க ளாம். அத ற்குப் பின் பேசுவதற்கு பொதுவாக ஏதுமில்லாமல் போ கிறது. குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள் கடமை, சொத்து வாங்குவது, உறவினர்களுடன் பழகுவது, விழாக்களில் கலந்து கொள்வது, முதலீடுகளில் ஈடுபடுவது என்று நடுத் தரப் பருவத்தில் வாழ்க் கை இயந்திர மயமாகிப் போகிறது. அதற் குப் பின் வெறும் பாதுகாப்புக்காக வே இணைந்து வாழ்வ தாகச் சொல்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.
சுவாரஸ்யமான உரை யாடல்கள் தான் தம்பதி யர்களுக்கிடையே நாளு க்கு நாள் உறவை செம்மை ப் படுத்துகின்றன. வீடு, குடும்பம் இவற்றைத் தவிர பிற உலக நடப்புக ளிலும் ஈடுபாடு கொண் டிருந்தால் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் கிடைக் கும். இசை, இலக்கியம், சினிமா, அரசியல், விளை யாட்டு, சமூகம் என்று ஆயிரம் விஷயங்கள் பேசு வதற்கு இரு க்கின் றன. ஆனால், அதைப் பற்றி எல்லாம் பேச பெரும் பாலானோரு க்கு விருப்பம் இல் லை. இன்கிரிமென்ட் பற்றியும், நகை வா ங்குவது பற்றி மட்டு மே யோசித்துக் கொண்டு, பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பேச்சு வார்த்தை என்பதே நாளடைவில் போரடித்துப் போ கிறது.

அன்பை புரியவைக்கும் பேச்சு
அளவுக்கு மீறின அன்பு தான் எப் போதும் சந்தேகங்களை உருவா க்கும். எனவே சந்தேக விதை உரு வாகாமல் தடுப்பது இரு வ ரின் கடமை. அலுவலகத்தில் இருக்கும் நட்பு வட்டாரத்தை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்வது சிறந்தது. இல் லையென்றால் சாதாரண தொலைபேசி உரையாடல் கூட இருவரின் பிரிவுக்கு காரணமாக அமைந்துவிடும்.

புரிதலின்மையால் தோன்றும் சிக்கல்
புரிதல் என்பது தம்பதியருக்கிடையே இருக்கக் கூடிய மிக முக் கியமான ஒன் று. ஒருவருக்கொருவர் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்போது பேச்சின் விப ரங்களை சரியாக புரிந்து கொ ண்டாலே பாதி பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட லாம். இன்றைய சூழலில் எதையுமே அரைகுறையாக புரிந்து கொண்டு விடுவதே பிரிவினைக்கு காரணமாகிறது.

வாழ்க்கை இப்படித்தான் செல்ல வேண்டுமா? கணவன் – மனைவி உறவு என்பது வெறும் கடமை போல் ஏன் குறுகி ஒரு கட்டத்தில் அது முறிந்து விடுகிறது.
எனவே மனம் விட்டு பேசுவோம். வீண் மன உளைச் சல்களையும், கண்ணீரையும் தவிர்ப்போம்.

No comments:

Post a Comment